காவிரி குறித்து பிரதமர் மோடியிடம் பேசும் துணிவு எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை: ஸ்டாலின்
காவிரி குறித்து பிரதமர் மோடியிடம் பேசும் துணிவு எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை : காவிரி நதி நீர் விவகாரம் குறித்து பிரதமர் மோடியிடம் பேசும் துணிவு டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அனைத்து மாநில முதல்வர்கள் மாநாடு இன்று டெல்லியில் நடக்கிறது. இதனை பிரதமர் மோடி தலைமையில் நடக்கவுள்ள இந்த மாநாட்டில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார். அங்கு பத்திரிகையாளர்களிடம் பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் காவிரி விவகாரம் குறித்து வலியுறுத்துவேன் என்று தெரிவித்து இருந்தார்.
இதற்கு கருத்து தெரிவித்துள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலின், காவிரி விவகாரம் குறித்து மோடியிடம் பேசும் துணிவு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை பிரதமரைச் சந்திக்க எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் அலுவலகம் நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும், அப்படியே நேரம் ஒதுக்கப்பட்டாலும் தனது அரசைக் காப்பாற்றிக்கொள்ளவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியைச் சந்திப்பார் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications