எடப்பாடியார் நாளைக்கு வரைக்கும் முதல்வரா இருக்காரான்னு பாக்கலாம்... பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி நாளை வரே நீடிப்பதே கேள்விக் குறிதான் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழகத்தில் மீண்டும் குடும்ப ஆட்சி வேண்டாம் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி நீடிப்பாரே என்பது கேள்விக்குறிதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 10 மாதங்களில் மட்டும் மூன்று முதல்வர்கள் மாறியுள்ளனர். கடந்த நாட்களுக்கு மேலாக நடந்து வந்த முதல்வர் பதவிக்கான போட்டி நேற்று முடிவுக்கு வந்தது.

எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றார். அவரது தலைமையில் 31 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.

நாளை சட்டசபைக் கூட்டம்

நாளை சட்டசபைக் கூட்டம்

நாளை கூடவுள்ள சட்டசபைக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார். இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கோவையில் செய்தியாளர்களிடம் பேசினார்.

காவல்துறைக்கு சுதந்திரம் இல்லை

காவல்துறைக்கு சுதந்திரம் இல்லை

அப்போது அவர் கூறியதாவது, கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்றுவந்த திராவிடக் கட்சிகளின் சகாப்தம் முடிவடைந்து. அதிமுக ஆட்சியில் காவல்துறையில் சுதந்திரமாக செயல்படவில்லை.

நாளை வரை நீடிப்பாரா?

நாளை வரை நீடிப்பாரா?

முதல்வராக பதவியேற்றுள்ள எடப்படி பழனிச்சாமியை சுதந்திரமாக செயல்பட விடமாட்டார்கள். மேலும் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி நாளை வரே நீடிப்பதே கேள்விக் குறிதான்.

குடும்ப ஆட்சி வேண்டாம்

குடும்ப ஆட்சி வேண்டாம்

தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான அனைத்து பணிகளையும் பாஜக மேற்கொள்ளும். தமிழகத்தில் குடும்ப ஆட்சியை மீண்டும் கொண்டு வரவேண்டாம். இவ்வாறு மத்திய அமைச்சர் பொன்.ராதகிருஷ்ணன் தெரிவித்தார்.

சசிகலா குடும்பத்தினர் ஆட்சி

சசிகலா குடும்பத்தினர் ஆட்சி

அதிமுக பொதுச்செயலாளரான சசிகலாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவரது அக்காள் மகனான டிடிவி.தினகரனை சசிகலா துணைபொதுச்செயலாளராக நியமித்தார். தற்போது சசிகலா தரப்பின் பிடியில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியே முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

சசி குடும்பத்தின் பிடியில் ஆட்சி

சசி குடும்பத்தின் பிடியில் ஆட்சி

இந்நிலையில் அதிமுக அரசு சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்பதை சூசகமாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். சசிகலா குடும்பத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மத்திய அமைச்சரின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+