காவிரி.. சட்ட வல்லுனர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி தீவிர ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார்.
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கியது. 177.25 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்பது உச்சநீதிமன்ற உத்தரவு. 192 டிஎம்சியாக காவிரி நடுவர்மன்றம் நிர்ணயித்த அளவை, உச்சநீதிமன்ற தீர்ப்பு குறைத்துவிட்டதால் தமிழக விவசாயிகள் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் உள்ளனர்.

வழக்கமாக தண்ணீர் விட மறுக்கும் கர்நாடகா, இதையாவது சரியாக நிறைவேற்றுமா என்ற குழப்பமும் தமிழக விவசாயிகளிடம் உள்ளது. இந்த நிலையில், காவிரி விவகாரத்தில் அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து, ஆலோசிக்க நாளை அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்டியுள்ளது.
முன்னதாக, சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications