பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, பவானிசாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணையில் இருந்து வரும் 5ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
பிசான பருவ சாகுபடிக்காக தண்ணீர் தேவை என விவசாயிகள் கோரிக்கைவிடுத்து வந்த நிலையில், இந்த நீர்த் தேக்கங்களிலிருந்து நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டால், நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 86,107 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.
அக்டோபர் 5ம் தேதி முதல் 3 அணைகளில் இருந்தும் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல பாசன வசதிக்காக அக்டோபர் 5 முதல் ஈரோடு பவானிசாகர் அணையிலிருந்து நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications