குடியரசு துணை தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க டெல்லி விரைந்தார் எடப்பாடி பழனிச்சாமி
Subscribe to Oneindia Tamil
சென்னை: குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை டெல்லி புறப்பட்டார்.
நாளை காலை 10 மணிக்கு நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் பங்கேற்க இன்று மாலை 5 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லிக்கு கிளம்பினார் எடப்பாடி பழனிச்சாமி.

நாளைய பதவியேற்பு விழாவில் தமிழக அமைச்சர்கள், தமிழக எம்பிக்களும் பங்கேற்கிறார்கள். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற எடப்பாடி பழனிச்சாமி தற்போது துணை குடியரசு தலைவர் பதவியேற்பு விழாவிலும் பங்கேற்க டெல்லி சென்றுள்ளார்.
இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ள பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications