எனக்கு இவ்வளவுதான் மரியாதையா?.. செங்கோட்டையாரிடம் கொதித்த எடப்பாடியார்!
சென்னை: கொஞ்சம் கூட மரியாதையே இல்லாமல், முதல்வரான என்னைப் போய் தேர்தல் பணிக் குழுவில் நியமித்துள்ளாரே தினகரன் என்று அமைச்சர் செங்கோட்டையனிடம் புலம்பியுள்ளாராம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது இடைத் தேர்தலாக இருந்தாலும் சரி, பொதுத் தேர்தலாக இருந்தாலும் சரி மொத்த அமைச்சர்களையும் பிரசாரக் களத்தில் இறக்குவார். தேர்தல் பணிக்குழுக்களையும் அமைப்பார்.
இடைத் தேர்தலுக்குக் கூட பெரிய சைஸ் குழுவைத்தான் அமைப்பது ஜெயலலிதா வழக்கம். அந்த வகையில் தற்போது ஆர்.கே.நகர் தொகுதியிலும் பெரிய சைஸ் தேர்தல் பணிக்குழுவை இறக்கியுள்ளது சசிகலா குரூப்.

152 பேர் குழு
தனது வெற்றிக்காக உழைப்பதற்கு 152 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை அமைத்திருக்கிறார் தினகரன். அதில் முதல்வர் எடப்படியும் அடக்கம். எடப்பாடி உள்ளிட்ட தேர்தல் பணிக்குழு தற்போது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

எடப்பாடியை எப்படி நியமிக்கலாம்
அதாவது, மாநிலத்தின் முதல்வராக இருப்பவரை தேர்தல் பணிக்குழுவில் இடம்பெற செய்யமாட்டார்கள். ஏனெனில், மாநிலத்தில் நிலவும் பல பிரச்சனைகளில் குறித்து முதல்வரிடம் உயரதிகாரிகள் ஆலோசிப்பர். அப்படிப்பட்ட நிலையில் ஒரு தொகுதிக்குள் முதல்வர் முடங்கிப்போனால் நிர்வாக பிரச்சனைகளை யார் கவனிப்பது?

சிறுமைப்படுத்திட்டாங்களே
அதுமட்டுமல்லாமல் தேர்தல் பணிக்குழுவில் முதல்வரை நியமித்து அவரது பதவியை சிறுமைப்படுத்திவிடக்கூடாது என்பது போன்ற காரனங்களால் முதல்வரை தேர்தல் பனிக்குழுவில் நியமிப்பதை தவிர்த்துவிடுவார்கள். ஆனால் திட்டமிட்டு எடப்பாடியாரை சிறுமைப்படுத்தி விட்டார் தினகரன் என்று பேச்சு எழுந்துள்ளது.

எடப்பாடி கோபம்
அதைபற்றி எல்லாம் கவலைப்படாமல் எடப்பாடியை போட்டுள்ளார் தினகரன். தேர்தல் பனிக்குழுவில் தன்னையும் இனைத்ததை எடப்பாடி ரசிக்கவில்லையாம். செங்கோட்டையனிடம் வருத்தப்பட்டுள்ளார் முதல்வர்.

ஜெ. செய்யாததையா நான் செஞ்சேன்
ஆனால் ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக இருந்த போது, நடைபெற்ற ஒரு இடைத்தேர்தலில் பன்னீரையும் உள்ளடக்கி தேர்தல் பணிக்குழுவை ஜெயலலிதா அமைத்துள்ளார். அது போலத்தான் நானும் செய்துள்ளேன் என்கிறாராம் தினகரன்.

அடப் போங்கப்பா
எடப்பாடியை உங்களுக்கு கீழாக நினைத்துக் கொள்ளுங்கள் பிரச்சனை இல்லை. ஆனால் முதல்வர் பதவிக்கு மரியாதை இருக்கிறது. அதைத் தரலாமே என சிலர் எடுத்துச்சொன்னதையும் அலட்சியப்படுத்திவிட்டாராம் தினகரன். அதானே. அதையெல்லாம் மதிச்சிருந்தாதான் அதிமுக இப்படி ஆகியிருக்காதே!
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications