காவிரி மேலாண்மை வாரியம்: டெல்லியில் மோடியுடன் எடப்பாடி நாளை சந்திப்பு
டெல்லியில் மோடியை எடப்பாடி நாளை சந்தித்து பேசுகிறார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் குறித்து டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை சந்தித்து பேச உள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் குறித்த வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய மே 3-ந் தேதிவரை மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது. மத்திய அரசு இந்த காலகெடுவுக்குள் தாக்கல் செய்யுமா? என்பது கேள்விக்குறி.

இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை டெல்லி செல்கிறார். டெல்லியில் பிரதமர் மோடியுடன் காவிரி மேலாண்மை வாரியம் குறித்த நிலைப்பாட்டை கேட்டறிவார் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications