காட்பாடிஅருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து.. ரயில் பயண நேரங்கள் மாற்றம்!
சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
Subscribe to Oneindia Tamil
வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது
காட்பாடி அருகே சேவூர் என்ற இடத்தில் காலை 6 மணியளவில் சென்றபோது, சரக்கு ரயிலின் 8 பெட்டிகளும் எதிர்பாராத விதமாக தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. தடம் புரண்ட பெட்டிகளை சீரமைக்கும் பணியில் ரயில்வே பணியாளர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக, சென்னையில் இருந்து பெங்களூர், கோவை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் 13 ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஆனாலும் இந்த ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் அந்த ரயில்கள் 3 மணி நேரம் காலதாமதமாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications