For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தம்பியை மூங்கில் குச்சியால் அடித்த அண்ணன்.. பதிலுக்கு கடப்பாரையால் அடித்த தம்பி.. பறிபோனது உயிர்

அண்ணனை கடப்பாறையால் அடித்து கொன்ற தம்பி கைது செய்யப்பட்டுள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    கும்பகோணம்.. அண்ணனை அடித்து கொன்ற தம்பி கைது -வீடியோ

    கும்பகோணம்: தம்பியை அண்ணன், மூங்கில் கொம்பால் அடிக்கவும், அண்ணனை தம்பி, இரும்பு கடப்பாரை கொண்டே அடித்து கொன்றுவிட்டார்.. காரணம் நாசமா போன இந்த குடிப்பழக்கம்தான்!

    கும்பகோணத்தை அடுத்த பந்தநல்லூர் அருகே பாலூர் குடியான தெருவை சேர்ந்த தம்பதி சின்னராஜ் - ராணி. இவர்களுக்கு 3 பெண், 3 ஆண் பிள்ளைகள்.

    Elderly brother murdered near Kumbakonam

    சின்னராஜ் 20 வருஷத்துக்கு முன்னாடியே இறந்து விட்டார். கடைசி மகன் சுந்தரமூர்த்தி கடந்த 10 மாசத்துக்கு முன்னாடிதான் காச நோய் வியாதியால் இறந்துவிட்டார்.

    தகப்பன் இல்லாததால்தானோ என்னவோ மூத்த மகனை யாராலும் கன்ட்ரோல் செய்ய முடியாமல் போய்விட்டது. அவர் பெயர் பாஸ்கரன், 42 வயதாகிறது. 10 வயசிலேயே குடிக்க ஆரம்பிச்சிட்டாராம். இப்போது மதுவுக்கு அடிமையாகவே ஆகிவிட்டார்.

    கணவர் குடும்பத்தின் தொடர் டார்ச்சர்.. தாங்க முடியாமல் தவித்த நிஷா.. கிச்சனில் தூக்கில் தொங்கினார்!கணவர் குடும்பத்தின் தொடர் டார்ச்சர்.. தாங்க முடியாமல் தவித்த நிஷா.. கிச்சனில் தூக்கில் தொங்கினார்!

    தண்ணி அடித்துவிட்டு வீட்டுக்கு வந்தாலே அம்மா, தம்பி அசோக்கிடம் தகராறுதான். அசோக்கிற்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. இந்நிலையில் நேற்றுகூட, பாஸ்கர் ஃபுல் போதையில் வீட்டுக்கு வந்து, தகராறு செய்துள்ளார். வெறும் தகராறு மட்டுமில்லாமல், கீழே கிடந்த மூங்கில் கம்பை எடுத்து கொண்டு அடிக்க ஆரம்பித்துவிட்டார். தம்பியால் வலி பொறுக்கவே முடியவில்லை.

    ஒரு கட்டத்தில் அடித்து முடித்து டயர்ட் ஆகிவிட்ட பாஸ்கர் ஒரு பிளாஸ்டிக் சேரில் போய் உட்கார்ந்து கொண்டார். ஆனால் ஆத்திரம் அடங்காத அசோக் ஓடிப்போய், இரும்பு கடப்பாரை கொண்டு வந்து பாஸ்கரின் தலையில் கொடூரமாக தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே அண்ணன் உயிரிழந்துவிட்டார். அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் அளிக்கவும் விரைந்து வந்தனர்.

    ஆனால் போலீஸை பார்த்ததும் தம்பி அசோக் தப்பி ஓட முயன்றார். ஆனாலும் விரட்டி சென்று கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணனை உடன் பிறந்த தம்பியே கடப்பாரையால் அடித்துக்கொன்ற சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Younger Brother murder his elder brother due to family issue near Kumbakonam and police investigation is going on
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X