டிசம்பர் 21ல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21ல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Recommended Video
சென்னை: சென்னை ராதாகிருஷ்ணன் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நவம்பர் 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் டிசம்பர் 4ஆம் தேதியாகும். வேட்புமனுக்கள் பரிசீலனை டிசம்பர் 5ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் டிசம்பர் 7ஆம் தேதியாகும்.
தேர்தல் தாமதம்
இதனிடையே ஆர்கே நகர் தேர்தலின் போது சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் அணி கட்சியின் சின்னம், பெயருக்கு உரிமை கொண்டாடியதால் சின்னம் முடக்கப்பட்டது. சின்னம் முடக்கப்பட்ட நிலையில் ஆர்.கே நகர் இடைத் தேர்தலை அறிவிக்காமல் தேர்தல் ஆணையம் கால தாமதம் செய்து வந்தது.
டெல்லியில் ராஜேஷ் லகானி
இந்நிலையில் டிசம்பர் 31ம் தேதிக்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லகோனி டெல்லியில் முகாமிட்டுள்ளதாக தெரிகிறது.
தேர்தல் தேதி அறிவிப்பு
தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் அதிகாரிகளுடன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதியை இறுதி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றதை அடுத்து இன்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தல் எப்போது?
டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நவம்பர் 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் டிசம்பர் 4ஆம் தேதியாகும். வேட்புமனுக்கள் பரிசீலனை டிசம்பர் 5ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் டிசம்பர் 7ஆம் தேதியாகும்.