165வது முறையாக வேட்பு மனுத்தாக்கல் செய்த தேர்தல் மன்னன் பத்மராஜன் - இம்முறை மகாராஷ்டிரா!
சேலம்: தேர்தல் மன்னன் எனக் குறிப்பிடப்படும் மேட்டூரைச் சேர்ந்த பத்மராஜன் 165வது முறையாக மகாராஷ்டிராவில் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.
வேட்புமனுத் தாக்கல் செய்தே பிரபலமானவர் சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த குஞ்சாண்டியூரை சேர்ந்த ‘தேர்தல் மன்னன்' பத்மராஜன் (55).

குடியரசுத்தலைவர் முதல் உள்ளூர் கவுன்சிலர் பதவி வரை இந்தியாவின் எப்பகுதியில் நடைபெறும் தேர்தலிலும் மனு தாக்கல் செய்வதாலேயே இவருக்கு தேர்தல் மன்னன் என்ற சிறப்புப் பெயர் கிடைத்தது எனக் கூறலாம். ஆனால், இது வரை போட்டியிட்ட ஒரு தொகுதியிலும் இவர் வெற்றி பெற்றதில்லை என்பது தனிக்கதை.
இவர் கடந்த 30-ந் தேதி 163-வது முறையாக சேலம் மாவட்டம் ஓமலூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்தார். அதே நாளில் மேட்டூர் நகராட்சி 24-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கும் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், நேற்று மராட்டிய மாநிலம் பீடு எம்.பி.தொகுதி இடைத்தேர்தலுக்கு மனு தாக்கல் செய்துள்ளார் பத்மராஜன். இது அவரது 165-வது மனுத் தாக்கல் ஆகும்.
அதிகப்படியான இடங்களில் மனுத்தாக்கல் செய்ததற்காக பத்மராஜன் பெயர் ஏற்கனவே லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications