அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளுக்கு ஜூன் 13-ல் தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
சென்னை: வரும் 23ம் தேதி தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளுக்கான தேர்தல் வரும் ஜூன் 13 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி மற்றும், தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் பணப்பட்டுவாடா அதிகமாக இருப்பதாக காரணம்கூறி, தேர்தலை ஒத்திவைத்தது, தேர்தல் ஆணையம். இதன்படி வரும் 23ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 2 தினங்கள் முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக தேர்தல் அதிகாரி, ராஜேஷ் லக்கானி, இவ்விரு தொகுதிகளிலும் சொன்னபடி தேர்தல் நடைபெற ஏற்ற சூழல் நிலவுகிறதா என்பதை ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழு அமைத்திருப்பதாக உத்தரவிட்டார்.
இதனிடையே, அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய இரு தொகுதிகளிலும், தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று, பாமகவின் அரவக்குறிச்சி வேட்பாளர், பாஜகவின் தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர் உள்பட 5 பேர், ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கில் தேர்தல் ஆணைய, பதிலை, ஹைகோர்ட் கேட்டது.
இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிபதிகளை அவர்களின் அறையில் சந்தித்து, 23ம் தேதி தேர்தலை நடத்தாமல் ஒத்திவைக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். வேட்பாளர்களுடன் கலந்து ஆலோசித்துவிட்டு, தேர்தல் தேதி நிர்ணயிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் சார்பில் நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இதை வழக்கு நடைபெறும் கோர்ட் ஹாலில் வைத்து பகிரங்கமாக தெரிவிக்கும்படி வக்கீலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி தேர்தல் ஆணையம் தேர்தலை ஒத்திவைக்கப்போவதாக கூறியது. 3 வாரங்களுக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதையடுத்து வழக்குகள் ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் வரும் ஜூன் 13 ஆம் தேதி தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இரு தொகுதிகளிலும் பதிவாகும் வாக்குகள் எப்போது எண்ணப்படும் என்பது பற்றி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் ஜூன் 20 ஆம் தேதிக்கு முன் முடிவடையும் என தமிழக தலைமை தேர்தல் ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார். முன்னதாக மே 16 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்தல் மே 23 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது ஜூன் 13 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications