'கள்ளக் காதலில்' ராணியாக வலம் வந்தவரை கட்டிபோட்டு சித்ரவதை செய்த எலக்ட்ரீஷியன் கைது
திருவண்ணாமலை பகுதியில் கள்ளக் காதலில் ராணியாக வலம் வந்தவரை கட்டி போட்டு சித்ரவதை செய்த எலக்ட்ரீஷியன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே தம்மைவிட்டு வேறு ஒருவருடன் தொடர்பு வைத்ததால் கள்ளக் காதலியை கட்டிப் போட்டு சித்திரவதை செய்த எலக்ட்ரீஷியனை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை உக்கலைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி மகனுடன் வசித்து வந்தார். 10 ஆண்டுகளுக்கு முன்னர் உத்திரமல்லூர் முருகேசன் என்பவரது வீட்டுக்கு எலக்ட்ரீஷியன் வேலைக்கு போனார் ராஜேந்திரன்.
அங்கு வேலை செய்த இடத்தில் முருகேசனின் மனைவி கிருஷ்ணவேணியுடன் ராஜேந்திரன் நெருங்கிப் பழகினார். இது கள்ளக்காதலாக விஸ்வரூபமெடுத்தது.
கள்ளக் காதலியுடன் குடும்பம்
ஒருகட்டத்தில் முருகேசனைவிட்டு ராஜேந்திரனுடன் கிருஷ்ணவேணி ஓடிப் போய்விட்டார். இருவரும் கணவன் மனைவியாக ஒரே வீட்டில் வசிக்க தொடங்கினார்.
மற்றொரு கள்ளக் காதல்
இதனால் ராஜேந்திரனின் மனைவி, மகனுடன் தாய்வீட்டுக்குப் போய்விட்டார். இந்த நிலையில் கள்ளக் காதலி கிருஷ்ணவேணி மற்றொரு நபருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார்.
தகராறு
கிருஷ்ணவேணியின் மற்றொரு கள்ளக் காதல் ராஜேந்திரனுக்கு தெரியவந்துள்ளது. இதனால் கிருஷ்ணவேணியிடம் சண்டை போட்டிருக்கிறார் ராஜேந்திரன். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
கைது
அப்போது கிருஷ்ணவேணியை தாக்கி அவரை கட்டிப்போட்டு வீட்டுக்குள் பூட்டி வைத்துவிட்டு வெளியே போய்விட்டார் ராஜேந்திரன். கிருஷ்ணவேணியின் அலறலைத் தொடர்ந்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து கள்ளக் காதல் ராணி கிருஷ்ணவேணியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தப்பி ஓடிய எலக்ட்ரீஷியன் ராஜேந்திரனை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் திருவண்ணாமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.