ஜெ. திறந்து வைக்கவுள்ள அதிமுக அலுவலகத்தில் விபரீதம்... மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் மரணம்!

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனியில் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைக்க இருக்கும் கட்சி அலுவலகத்தில் வேலை செய்த எலக்ட்ரீசியன் மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

தேனியில் இருந்து போடி செல்லும் வழியில் கோடாங்கிப்பட்டி அருகே அதிமுக மாவட்ட அலுவலகம் கட்டுவதற்கு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பூஜைபோட்டு துவங்கி வைத்தார். அலுலவகத்தின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்தது. இதையடுத்து வரும் 13 ஆம் தேதி ஜெயலலிதா வீடியோ கான்பரன்ஸ் மூலம் அதனை திறப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. இன்று அந்த அலுவலகம் முன்பு எம்.ஜி.ஆர் சிலையும் நிறுவப்பட்டுவிட்டது.

அலுவலகத் திறப்பிற்கு இரண்டு நாட்களே இருப்பதால் மின் அலங்கார விளக்குகள் அமைக்கும் பணி நடந்தது வந்தது. அப்போது தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்தவரும், ஆதித் தமிழர் பேரவையில் பொறுப்பில் உள்ளவருமான சரவணன் அந்தப் பணியில் ஈடுபட்டிருந்போது மின்சாரம் தாக்கியது. துடிதுடித்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சரவணனுக்கு லட்சுமி என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். சரவணன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததை மறைக்க முயற்சித்துள்ளனர் அதிமுகவினர். இருப்பினும் தற்போது இந்த விஷயம் வெளியே கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+