மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி அநியாய பலி - வீடியோ
கிருஷ்ணகிரியில் பெய்த கனமழையால் மின் வயர்கள் அறுந்துவிழுந்தன. அவற்றை சரிசெய்துகொண்டிருந்த போது மின்வாரியத்துறை ஊழியர் மின்சாரம் தாக்கி பலியானார்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் கனமழை பெய்து வருகிறது. அப்போது பழுதடைந்த ட்ரான்ஸ்பார்மர் ஒயரை சரிசெய்த மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி, சம்பவ இடத்திலேயே பலியானார்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. மதுரை, தேனி உள்பட சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. ஊட்டியில் பெய்த மழையால் மரங்கள் சாய்ந்து சில மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரியிலும் மழை பெய்து வருகிறது. நேற்று பெய்த மழையின் போது மின் வயர்கள் அறுந்துள்ளன. அதையடுத்து மின் வாரியத்துறை ஊழியர் செல்வராஜ் ட்ரான்ஸ்பார்மரில் ஏறி வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது மின்சாரம் தாக்கி, அவர் உயரத்திலிருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. மேலும், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications