எம்எல்ஏக்கள் தங்கியுள்ள ரிசார்ட்டில் மின்சாரம் துண்டிப்பு... போலீஸ் அதிரடி
எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள கூவத்தூர் ரிசார்ட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை: கூவத்தூர் ரிசார்ட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ரிசார்ட்டை விட்டு எம்எல்ஏக்கள் வெளியேற மறுத்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த கூவத்தூர் ரிசார்ட்டில் இன்று 7வது நாளாக சசிகலா ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். சசிகலாவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சசிகலா, இளவரசி சுதாகரன் ஆகிய மூன்று பேரும் உடனடியாக சரணடைய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. ஆனால் இதுவரை சசிகலா சரணடையமால் ரிசார்ட்டிலேயே முகாமிட்டுள்ளார்.
இந்நிலையில் போலீசார் வெளியேற கூறியும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் சிலர் ரிசார்ட்டை விட்டு வெளியேற மறுத்து வருகின்றனர். இதையடுத்து எம்எல்ஏக்கள் உள்ள ரிசார்ட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசாரும் அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஏரளாமான காவல்துறையினர் கைகளில் லத்தியுடன் குவிக்கப்பட்டுள்ளனர்.