For Daily Alerts
Just In
எமிரேட்ஸ் விமானத்தில் இயந்திரக் கோளாறு- தாமதத்தால் சென்னையில் பயணிகள் அவதி
சென்னை: சென்னையில் இயந்திரக் கோளாறால் எமிரேட்ஸ் விமானம் புறப்பட தாமதமானதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சென்னையிலிருந்து இன்று துபாய் செல்லும் எமிரேட்ஸ் விமானம், இயந்திர கோளாறு காரணமாக காலதாமதம் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அதில் பயணம் செய்யவிருந்த 362 பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். 4 மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டிருந்தும் இன்னும் புறப்படாததால் பயணிகள் தவித்து வருகின்றனர்.
எஞ்சின் மற்றும் மேலும் சில இயந்திரப் பகுதிகளில் கோளாறு இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சில மணி நேரங்களில் கோளாறு முற்றிலும் சரி செய்யப்பட்டு விமானம் புறப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments
English summary
Chennai emirates filght delayed due to engine problem, passangers in trouble.
Story first published: Friday, September 25, 2015, 8:37 [IST]