இந்தியை படிக்கச் சொல்லுங்க.. ஆனால் கட்டாயப்படுத்தக் கூடாது.. மத்திய அரசு
இந்தி மொழி கற்பித்தலை மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும், கட்டாயப்படுத்தக் கூடாது என்று மத்திய அரசு கூறியுள்ளது.
டெல்லி: இந்தி மொழி கற்பிப்பதை மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும், கட்டாயப்படுத்தக் கூடாது என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இந்தி ஆலோசனைக் குழு பரிந்துரை செய்துள்ளது.
மத்தியில் பாஜக தலைமையிலான அரசு அமைந்தது முதல் இந்தி மொழியை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கற்களில் தமிழ், ஆங்கிலம் தவிர இந்தியிலும் ஊர் பெயர் எழுதப்பட்டது. இது இந்தியை தமிழ்நாட்டில் திணிக்கும் முயற்சி என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து இந்தி தாய் மொழி அல்லாத மாநில அரசுகள் மீது திணிக்க முயற்சித்து வருவதாக பல்வேறு கோணங்களில் இருந்து குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே தலைமையில் இந்தி ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்தி மொழி கற்பிப்பதை மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும், கட்டாயப்படுத்தக் கூடாது என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இந்தி ஆலோசனைக் குழு பரிந்துரை செய்துள்ளது.
முன்னதாக, சி.பி.எஸ்.இ.-ன் கீழ் இயங்கும் பள்ளிகள் மற்றும் கேந்திர வித்யாலயா உள்ளிட்ட பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை இந்தியை கட்டாயப்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு கடந்த மாதம் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டு இருந்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை இந்தி பேசாத மாநிலங்களின் விமர்சனங்களுக்கு ஆளானது.
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள அரசியல் தலைவர்கள் பாஜகவின் இந்தி திணிப்பை கடுமையாக எதிர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.டெல்லி: இந்தி மொழி கற்பிப்பதை மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும், கட்டாயப்படுத்தக் கூடாது என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இந்தி ஆலோசனைக் குழு பரிந்துரை செய்துள்ளது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications