கார் பல்டி அடித்து கல்லூரி மாணவர் சாவு
சென்னை: அதிவேகமாக சென்ற கார் பல்டி அடித்ததில் சென்னை இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் உயிரிழந்தார். உடன் பயணித்த கல்லூரி நண்பர்கள் படுகாயமடைந்தனர்.
சென்னையின் மாதவரம் பகுதியிலுள்ள ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்த ஹரிகரன், பாரத், சதீஷ், கார்த்திக், ராஜன், பிரவீன் மற்றும் செல்வம் ஆகியோர் நேற்று இரவு கார் ஒன்றில் வளசரவாக்கத்தில் இருந்து பெசன்ட் நகர் பீச்சுக்கு சென்று கொண்டிருந்தனர்.
காரை பரத் ஓட்டிச் சென்றார். அடையாறு எல்.பி.சாலையில் கார் சென்றபோது, வளைவில் வேகத்தை குறைக்காமலே காரை திரும்பியுள்ளார் பரத். அப்போது, கார் பல்டி அடித்து கவிழ்ந்தது. இதில் ஹரிகரன் அதே இடத்தில் உடல் நசுங்கி பலியானார்.
பிற மாணவர்கள் காரில் இருந்து தூக்கி வெளியே வீசப்பட்டனர். படுகாயமடைந்த அனைவரும் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். காரை தாறுமாறாக ஓட்டிய பரத் கைது செய்யப்பட்டார்.