புளிய மரத்தில் கார் மோதி விபத்து– பொறியியல் கல்லூரி மாணவர்கள் இருவர் பரிதாப பலி
கோவை: கோவையில் கார் ஒன்று புளிய மரத்தில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் அக்காரில் பயணம் செய்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் இருவர் பலியாகிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள குரும்பபாளையத்தில் தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது.
இந்தக் கல்லூரியில் நீலகிரி மாவட்டம், வண்டிச்சோலை பகுதியைச் சேர்ந்த செல் வராஜின் மகன் நந்தகுமார், மகாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சேர்ந்த குமரே சனின் மகன் அருண்ராஜ் ஆகிய இருவரும் மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும், கல்லூரிக்கு அருகிலேயே வாடகைக்கு அறை எடுத்து தங்கியுள்ளனர். இவர்களின் நண்பரான கிஷோர் என்பவர் சென்னையிருந்து கார் மூலம் கடந்த நான்கு நாள்களுக்கு முன் குரும்பபாளையத்துக்கு வந்துள்ளார்.
இந்நிலையில், நந்தகுமார், அருண்ராஜ் ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு, கிஷோரின் காரை எடுத்துக் கொண்டு கோவைக்கு சென்றனர்.
அந்தக் கார், குரும்பபாளையத்தில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோயில் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் நந்தகுமார், அருண்ராஜ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீஸார் நந்தகுமார், அருண்ராஜ் ஆகியோரின் சடலங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோவில்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications