ஜெயலலிதா மரணம் தொடர்பாக 3 மாதத்தில் விசாரணை அறிக்கை... தமிழக அரசு அரசாணையில் உத்தரவு
ஜெயலலிதா மரணம் தொடர்பாக 3 மாதத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசு அரசாணையில் வெளியிட்டுள்ளது.
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் 3 மாதத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசு தனது அரசாணையில் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி உடல்நல குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாள்கள் சிகிச்சை பெற்ற அவர் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்துவிட்டார்.

இதுதொடர்பாக பொதுமக்களிடையே பெரும் சந்தேகங்கள் சமூக வலைதளங்களில் உலா வந்தன. இந்நிலையில் அவர் மரணம் குறித்த சந்தேகங்களை போக்க தமிழக அரசு விசாரணை கமிஷனை அமைத்தது. அதன் தலைவராக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமியை நியமித்தது.
இந்நிலையில் விசாரணை கமிஷன் அமைத்தது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் விசாரணை கமிஷன் தனது விசாரணை அறிக்கையை வரும் 3 மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் மரணமடைந்த நாள் வரை நடந்தவை அனைத்தையும் விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு












Click it and Unblock the Notifications