தினகரன் கெடு... அதிமுக அலுவலகத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுடன் ஈபிஎஸ் நாளை ஆலோசனை
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நாளை அவசர ஆலோசனை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: அணிகளை இணைப்பதற்கு டிடிவி தினகரன் கொடுத்த கெடு நெருங்கி வரும் நிலையில் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அதிமுக இரு அணிகளாக பிரிந்தது. ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என பிரிந்த அதிமுக இப்போது 3 அணியாக பிரிந்துள்ளது. டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர்.
இரட்டை இலைக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட டிடிவி தினகரன் திகார் சிறைக்கு சென்றார். ஜாமீனில் வெளிவந்த அவர், அணிகளை இணைக்க 2 மாதங்கள் அவகாசம் கொடுத்தார். அணிகளை இணைக்க தினகரன் கொடுத்த கெடு முடிவடைய இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளன.
ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து டிடிவி தினகரன் கட்சிப்பணியாற்றப்போவதாக கூறியுள்ளார். அணிகள் இணைப்பு சில நாட்களில் நடைபெறும் என்று கூறப்பட்டது.
சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றதாக கூறப்பட்டாலும் அணிகள் இணைப்பு பற்றியும் டிடிவி தினகரன் அரசியல் பேச்சு பற்றியும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 5 முதல் டிடிவி தினகரன் கட்சி அலுவலகத்திற்கு வரப்போவதாக கூறியுள்ள நிலையில் நாளை நடைபெறும் ஆலோசனைக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
-
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ! தினகரன் அதிர்ச்சி -
கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்திருந்தேனா? நாக்கில் நரம்பிருக்கா பழனிசாமி? ஸ்டாலின் ஆவேசம் -
"அம்மாவின் அன்பு! என்றும் அம்மாவின் நினைவில்!" அவிநாசி தனபால் திடீர் உருக்கம்! இபிஎஸ்ஸுக்கு மெசேஜா? -
அதிமுகவுக்கு அந்த 50 இடங்கள் இடிக்குதே? உள்குத்து டேஞ்சர்! எடப்பாடி இதை செய்தாலே போதுமே -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ்












Click it and Unblock the Notifications