முடிந்தது சட்டசபை கூட்டத் தொடர்.. ஜெ. நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் மரியாதை
சட்டசபை கூட்டத் தொடர் முடிவடைந்ததை அடுத்து ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் மரியாதை செலுத்தினர்.
சென்னை: சட்டசபை கூட்டத் தொடர் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் மரியாதை செலுத்தினர்.
கடந்த மார்ச் மாதம் தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதற்காக அவை மார்ச் 15-ஆம் தேதி கூடியது. இதையடுத்து மார்ச் 19 முதல் 22-ஆம் தேதி வரை கூட்டத் தொடர் நடந்து முடிந்தது.

இந்நிலையில் துறை வாரியான மானிய கோரிக்கை விவாதம் நடத்த தமிழக சட்டசபை கடந்த மே 29 -ஆம் தேதி கூடியது. ஜூலை 9-ந் தேதி வரை மொத்தம் 23 நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத் தொடர் தினமும் காலை 10 மணிக்கு தொடங்கியது. ஒவ்வொரு நாளும் முதலில் கேள்வி நேரம் முடிந்ததும் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.
இன்று லோக் ஆயுக்தா ஒரு மனதாக சட்டசபையில் நிறைவேற்றினர். இதையடுத்து இன்றுடன் கூட்டத் தொடர் முடிவடைந்தது. இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் மெரினா கடற்கரைக்கு சென்றனர்.
அங்கு ஜெயலலிதா சமாதிக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதையடுத்து ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது லோக் ஆயுக்தா முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என்று எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த திமுகவுக்கு கண்டனம் தெரிவித்தார்.
-
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா?












Click it and Unblock the Notifications