1 லட்சம் கைத்தறி நெசவாளர்கள் வாழ்வாதாரம் கவலைக்கிடம்.. தமிழக அரசு காப்பாற்ற கோரிக்கை!
நலிவடைந்து வரும் கைத்தறி தொழிலை தமிழக அரசு காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது,
ஈரோடு: ஈரோட்டில் அழிந்து வரும் கைத்தறி தொழிலை பாதுகாக்க வேண்டும் என்று அம்மாவட்ட விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் பவானி, கவுந்தப்பாடி, சென்னிமலை, அந்தியூர் உள்ளிட்ட பகுதிகளில் 50 ஆயிரம் விசைத்தறிகள் உள்ளன. இதனை நம்பி ஒரு லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.
இவர்களுக்கு நெசவுத்தொழில் தான் வாழ்வாதாரம். கைத்தறி நெசவாளர்களை பொறுத்தவரை கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளனர். இந்த சங்கங்களில் நூல் பெற்று நெசவாளர்கள் நூலை பெற்று கூலி அடிப்படையில் நெசவு செய்துவருகின்றனர்.

நெருக்கடியில் கைத்தறி
அந்த வகையில் பவானியில் தயாரிக்கப்படும் ஜமுக்காளம் உலக புகழ் பெற்றதாகும். எனினும் தற்போது கைத்தறி தொழிலானது தற்போது பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. ஏற்கெனவே வரியில்லாமல் இருந்த இந்த தொழிலுக்கு தற்போது 5 % ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டுள்ளது.

மிதியடிகளுக்கு 12% வரி
கைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படும் மிதியடிகளுக்கு 12% ஜி.எஸ்.டியும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சுமார் 20 ஆயிரம் கைத்தறிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

நிலுவையில் மானிய தொகை
இது இப்படி இருக்க கைத்தறி நெசவாளர் சங்கங்களுக்கு தமிழக அரசு வழங்க வேண்டிய மாநிய தொகை பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சுமார் 400 கோடி ரூபாய் வரை நிலுவைதொகை உள்ளது. இந்த தொகையினை வழங்க அரசு காலம்தாழ்த்தி வருவதால் நூல் கொள்முதலுக்கு பணமின்றி நெசவாளர் சங்கங்கள் நிதிநெருக்கடியை சந்தித்துள்ளது.

வங்கி கடன் கட்டமுடியாத நிலை
மேலும் மானிய தொகையினை நம்பி வங்கிகளில் பெறப்பட்ட கடனுக்கு வட்டி கட்ட முடியாத நிலையும் நெசவாளர்களுக்கு கூலி வழங்க முடியாத நிலையும் உள்ளது. இதனால் தமிழக அரசு இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு நிலுவை தொகையினை வழங்கி அழிந்து வரும் கைத்தறி தொழிலையும் நெசவாளர்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதே நெசவாளர்களின் விருப்பமாக உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications