ஈரோடு அருகே வினோத திருவிழா... ஆட்டு ரத்தத்தை குடித்து ஆவேசமடையும் பூசாரிகள்
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் செம்முனீஸ்வரர் ஆலயத்தில் வினோதமான திருவிழா நடைபெற்றது.
Recommended Video

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூரில் செம்முனீஸ்வரர் ஆலயத்தில் வினோதமான திருவிழா நடைபெற்றது. இதன் பெயர் குட்டி குடி என்பதாகும்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள பூசாரியூரில் அமைந்துள்ளது செம்முனீஸ்வரர் திருக்கோயில். இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி கடந்த 16 ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குட்டிகுடி திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி சப்பரத்தில் சாமியை படியமர்த்தி சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் தோளில் சுமந்து சென்றனர்.
இதனையடுத்து நீண்ட வரிசையில் கையில் ஆட்டுகுட்டிகளுடன் காத்திருந்த பக்தர்கள் தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தினர். அப்போது வெட்டிய ஆட்டுகுட்டிகளின் ரத்தத்தை குடித்தபடி பூசாரிகள் ஆக்ரோசமாக ஆடியது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

மற்ற கோவில்களில் பெரிய ஆடுகளை மட்டும்தான் பலியிடுவது வழக்கம்.ஆனால் இந்த கோவில்களில் பிறந்த குட்டி முதல் 5 கிலோ எடை வரையிலான குட்டிகள் மட்டுமே பலியடயிடப்படுறது. விழா முடிந்த பின்னர் நேர்த்திகடனாக பலியிடப்பட்ட ஆயிரகணக்கான ஆட்டுகுட்டிகளும் சப்பரத்தை சுமந்தவர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
இவ்வாறு நேர்த்திகடன் செலுத்துவதால் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறும்,பில்லி சூன்ய பாதிப்பில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளலாம் என்பது செம்முனீஸ்வரர் பக்தர்களின் நம்பிக்கையாகும்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications