ஈரோட்டில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்: தாய்-மகனை தாக்கி நகை, பணம் கொள்ளை
தாய், மகனை தாக்கிய மர்மகும்பல் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது.
ஈரோடு: ஈரோட்டில் தாயையும் மகனையும் தாக்கியதோடு, நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்மகும்பலுக்கு போலீசார் வலை வீசியுள்ளனர்.
ஈரோடு அருகேயுள்ள ஓடைகாட்டு வலசை சேர்ந்தவர் தங்கம்மாள். இவரது மகன் கோபாலகிருஷ்ணன். விவசாயிகளான இவர்கள் நேற்றிரவு வீட்டில் இருந்தபோது, காரில் வந்த முகமூடி அணிந்த 6 பேர் கொண்ட கும்பல் வீட்டின் பின்பக்க கதவின் வழியாக உள்ளே நுழைந்துள்ளது.

அறிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வந்த அக்கும்பல் தங்கம்மாளின் வாயில் துணியை வைத்து அழுத்தியது. மேலும் கோபாலகிருஷ்ணனை அரிவாளால் தாக்கியது.
இதனையடுத்து தாய், மகன் இருவர் அணிந்திருந்த நகைகள், மற்றும் பீரோவில் இருந்த 7 சவரன் நகைகள், 15 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தையும் கொள்ளையடித்து அந்த கும்பல் தப்பி சென்றது.
இதனையடுத்து தாய், மகன் இருவரும் கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்பவ பகுதிக்கு வந்த அரச்சலூர் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த கோபாலகிருஷ்ணன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதே வீட்டில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பும் மர்ம கும்பல் ஒன்று நுழைந்து நகை பணம் மற்றும் ஆவணங்களை கொள்ளையடித்து சென்றுள்ளது. இதுதொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கையில்லை என உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதேபோல் அப்பகுதியில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்து வருவதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications