பெற்றோர் எதிர்ப்பு... போலீசிடம் தஞ்சமடைந்த ஈரோடு, திருப்பூர் காதல் ஜோடிகள்!
ஈரோடு : பெற்றோர் எதிர்ப்பால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்ட சேலம் மற்றும் திருப்பூர் காதல் ஜோடிகள், பாதுகாப்பு கேட்டு முறையே ஈரோடு மற்றும் திருப்பூர் போலீசிடம் தஞ்சம் அடைந்தனர். பின்னர் போலீசாரின் சமரசப் பேச்சு மூலம் அந்தக் காதல் ஜோடிகளை அவர்களது பெற்றோர் ஏற்றுக் கொண்டனர்.
சேலம் காதல் ஜோடி:
சேலம் மாவட்டம், ஆத்தூரை சேர்ந்த இளவரசன் (27), ஈ.சி.ஈ. பட்டயப்படிப்பு முடித்துவிட்டு அதே பகுதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும், கடையின் கட்டிட உரிமையாளர் சோமசுந்தரத்தின் மகள் மனோத்பிரியா (23) இடையே காதல் மலர்ந்தது.
கடந்த ஒரு ஆண்டாக இவர்கள் காதலித்து வந்தனர். இந்நிலையில், சமீபத்தில் இவர்களது காதல் விவகாரம் இருதரப்பு பெற்றோருக்கும் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து இருதரப்பு பெற்றோரும் இளவரசன் -மனோத்பிரியா காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் வீட்டை விட்டு வெளியேறிய இந்தக் காதல் ஜோடி கடந்த 19ம் தேதி நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின்னர் பள்ளிபாளையத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் தங்களது திருமணத்தை பதிவு செய்து கொண்ட இளவரசனும், மனோத்பிரியாவும் ஈரோட்டில் உள்ள நண்பர் ஒருவர் வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாதுகாப்பு கேட்டு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இளவரசனும், மனோத்பிரியாவும் தஞ்சம் அடைந்தனர். காதல் ஜோடியிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி விசாரணை நடத்தினார். பின்னர் அவர்கள் மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து இருதரப்பு பெற்றோருக்கும் மகளிர் போலீசார் தகவல் கொடுத்தனர். நேற்று மாலை போலீஸ் நிலையத்திற்கு இருதரப்பு பெற்றோரும் வந்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில் பெற்றோர் அவர்களை ஏற்றுக் கொண்டனர்.
திருப்பூர் காதல் ஜோடி:
இதேபோல், திருப்பூர் காதல் ஜோடி ஒன்றும் பாதுகாப்புக் கோரி வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.
திருப்பூர் 15.வேலம்பாளைம் அண்ணா வீதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருடைய மகள் மேகலா(21), பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே நிறுவனத்தில் வேலை பார்த்த தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் அருகே உள்ள ஏ.பாப்பாரபட்டி கெட்சல ஹள்ளியை சேர்ந்த பாலாஜி (26) என்பவருக்கும், மேகலாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இந்நிலையில், கடந்த மாதம் 22ம் தேதி பணிக்கு சென்ற மேகலா வீடு திரும்பவில்லை. இதையடுத்து, மேகலாவைக் காணவில்லை என அவரது தந்தை போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், பாலாஜியும் மாயமானது தெரிய வந்தது. இதையடுத்து பாலாஜியின் செல்போனை போலீசார் தொடர்பு கொண்ட போது, பாலாஜியும், மேகலாவும், திருமணம் செய்து கொண்டு ஏ.பாப்பாரபட்டியில் குடும்பம் நடத்தி வருவது கண்டுபிடிக்கப் பட்டது.
அதனைத் தொடர்ந்து, நேற்று 15. வேலம்பாளையம் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சமடைந்தது. பின்னர், இருவரின் பெற்றோரையும் வரவழைத்த போலீசார், பேச்சுவார்த்தை மூலம் அவர்களை சமரசம் செய்தனர். இதையடுத்து காதல் ஜோடி அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு கணவர்.. வீணான மனைவிக்கான போராட்டம்.. அதற்காக இப்படியா? -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம்












Click it and Unblock the Notifications