கருணாநிதியுடன் ஐரோப்பிய பிரதிநிதிகள் குழு சந்திப்பு - இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து பேச்சு
சென்னை: சென்னை வந்துள்ள ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இன்று திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

இந்தியாவுடனான ஐரோப்பிய நாடுகளின் உறவை வலுப்படுத்துவதற்காக, ஓவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பின் தூதர் தலைமையிலான 10 நாடுகளின் பிரதிநிதிகள் சுற்றுப்பயணம் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதன்படி, சென்னை வந்துள்ள இவர்கள், வரும் 11ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

தங்கள் சுற்றுப்பயணத்தின் ஒரு கட்டமாக இக்குழுவினர் இன்று திமுக தலைவர் கருணாநிதியை அவரது வீட்டில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது, இலங்கைத் தமிழர் பிரச்னையில் பன்னாட்டு நீதி விசாரணை குறித்த நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.

மேலும், ஐரோப்பிய நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டிருப்பதைப் போல இந்தியாவிலும், அந்த தண்டனைக்கு தடை விதிக்க இந்த சந்திப்பின் போது வலியுறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் தொடர்ச்சியாக இக்குழுவினர் தமிழக ஆளுநர் மற்றும் முதல்வர் ஆகியோரையும் சந்திப்பார்கள் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications