Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பழம் பழுக்க வேண்டும்... நேரம் வர வேண்டும்.. கூட்டணி குறித்து ஈவிகேஎஸ் பேச்சு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பத்திரிகையாளர்கள் எதிர்பார்ப்பது போல நடக்க வேண்டுமென்றால் நேரம் கூடி வர வேண்டும். பழம் பழுக்க வேண்டும். அதுவாக பழுக்க வேண்டும் என்று திமுகவுடனான கூட்டணி குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

சென்னையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் நினைவஞ்சலி கூட்டத்தில் திமுக ராஜ்யசபா எம்.பியும், கவிஞருமான கனிமொழி கலந்து கொண்டார்.

தேசிய முரசு வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமை தாங்கினார்.

எதையோ எதிர்பார்த்து

எதையோ எதிர்பார்த்து

நிகழ்ச்சியில் இளங்கோவன் பேசுகையில், ஜெயகாந்தன் நினைவஞ்சலி கூட்டத்தில் இளங்கோவன், கனிமொழி, கம்யூனிஸ்டு தலைவர்கள் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டதால் ஏதோ எதிர்பார்த்து பத்திரிகையாளர்கள் காலையிலேயே வந்து விட்டனர்.

நேரம் வர வேண்டும், பழம் பழுக்க வேண்டும்

நேரம் வர வேண்டும், பழம் பழுக்க வேண்டும்

அவர்களுக்கு செய்தி கொண்டு போக வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக இங்கு குவிந்துள்ளனர். நீங்கள் எதிர்பார்க்கும் எதற்கும் ஒரு நேரம் வர வேண்டும். பழம் பழுக்க வேண்டும். அதுவா பழுக்க வேண்டும்.

மணிமண்டபம் அமைப்போம்

மணிமண்டபம் அமைப்போம்

ஜெயகாந்தனுக்கு அவருடைய பெயரை என்றென்றும் சொல்லிக்கொண்டு இருக்கும் வகையில் நினைவு மண்டபம், மணி மண்டபம் எதையாவது அனைத்துக் கட்சி சார்பில் செய்ய முயற்சி எடுப்பேன். இதற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்ற கட்சி தலைவர்களையும் சந்தித்து பேசுவேன் என்றார் அவர்.

அரசு மரியாதை கூட செலுத்தவில்லை

அரசு மரியாதை கூட செலுத்தவில்லை

நிகழ்ச்சியில் கனிமொழி பேசுகையில், ஜெயகாந்தன் மறைவுற்றதற்கு அரசு சார்பில் ஒரு மரியாதை கூட செலுத்தவில்லை. இது வேதனை அளிக்கிறது. கேரளாவில் இதுபோல் கிடையாது. உரிய மரியாதை கொடுக்கிறார்கள்.

பெண்களை மதித்தவர் ஜெயகாந்தன்

பெண்களை மதித்தவர் ஜெயகாந்தன்

ஜெயகாந்தன் மனதில் பட்டதை தைரியமாக எழுதக்கூடியவர். பெண்களை மதிக்கக்கூடியவர். அந்த காலத்திலேயே துணிச்சலாக விமர்சனம் செய்து கதை எழுதியவர். அச்சம் என்பது அவருக்கு கிடையாது என்றார் அவர்.

யார் யார்?

யார் யார்?

கூட்டத்தில் சிபிஎம் எம்.பி. டி.கே.ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கே.சுப்பராயன், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், ஹெலன் டேவிட்சன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் யசோதா, செல்வ பெருந்தகை, விஜயதரணி எம்.எல்.ஏ உள்பட பலர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சியின் ஊடகத்துறை தலைவர் கோபண்ணா இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+