பிரேமலதா என்ன சொன்னா நமக்கென்ன... நமக்கு விஜயகாந்த்தான் முக்கியம்.. இளங்கோவன்
சென்னை: தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த்தான். பிரேமலதா விஜயகாந்த் அல்ல. எனவே விஜயகாந்த் சொல்வதுதான் முக்கியம் என்று கூறியுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
திமுக கூட்டணியில் முதல் ஆளாகப் போய்ச் சேர்ந்து விட்டது காங்கிரஸ். இதையடுத்து தேமுதிகவை அழைத்து வரும் வேலையை காங்கிரஸிடமே ஒப்படைத்து விட்டது திமுக.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்து விரைவில் பேசுவேன் என்று இளங்கோவனும் கூறியுள்ளார். இந்த நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணியை பிரேமலதா கடுமையாக விமர்சித்துப் பேசியது அதிர்ச்சி அலைகளை திமுக வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளது.
தேமுதிகவைப் பொறுத்தவரை விஜயகாந்த்தான் தலைவர் என்றாலும் கூட, தனது மனைவியின் கருத்துக்கு மதிப்பு கொடுப்பவர் விஜயகாந்த் என்பதால் திமுக கூட்டணிக்கு திமுக வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து இளங்கோவனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, விஜயகாந்த் திமுக கூட்டணிக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளோம். நிச்சயம் வருவார் என்று நம்புகிறோம். வேறு என்ன சொல்வது?
பிரேமலதா விஜயகாந்த், சமூக வலைத்தளங்களை மேற்கோள் காட்டி திமுக, காங்கிரஸ் கூட்டணி பற்றி கூறி இருக்கும் கருத்தை வைத்து எதுவும் சொல்ல முடியாது. தேமுதிக தலைவர் விஜயகாந்த்தான். அவர் கூறும் முடிவுதான் முக்கியமானது. உறுதியானது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications