அரசு ஆவணங்கள் திருடப்பட்ட விவகாரத்தில் பிரதமர் பதவி விலகத்தயாரா? ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் ரகசிய ஆவணங்கள் மாயமானது தொடர்பாக பிரதமர் மோடி உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும். இதற்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலகுவாரா? என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் எய்தவனை விட்டு அம்பை நோவது ஏன் என்றும் அவர் வினவியுள்ளார்.

இது தொடர்பாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கை:

''மத்திய அரசின் ரகசிய ஆவணங்களை திருடியதில் டெல்லி போலீசாரால் 7 பேர் கையும், களவுமாக கைது செய்யப்பட்டுள்ள செய்தி நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இவர்களிடமிருந்து இரண்டு கோணிப்பை நிறைய ஆவணங்கள் சோதனையில் கைப்பற்றப்பட்டுள்ளது. இத்தகைய ஆவணங்கள் பெட்ரோலியத்துறை, நிலக்கரித்துறை, எரிசக்தித்துறை, நிதி அமைச்சகம் போன்ற மிக முக்கியமான துறைகளில் நிகழ்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+