Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொய் பேசிய "தோப்பு" மன்னிப்பு கேட்க வேண்டும்... ஈவிகேஎஸ் இளங்கோவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் கோகோ கோலா நிறுவனத்திற்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்று சட்டசபையில் பொய் பேசிய அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

EVKS Elangovan slams minister Thoppu Venkatasalam

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

பெருந்துறை சிப்காட் தொழில் வளாகத்தில் பன்னாட்டு நிறுவுனமான கோகோ கோலா குளிர்பான தயாரிப்புக்காக ரூ.500 கோடி முதலீட்டில் தொடங்குவதற்கு தமிழக அரசு 72 ஏக்கர் நிலத்தை 99 ஆண்டு கால குத்தகைக்கு ஏக்கர் 1 ரூபாய்க்கு தரை வார்த்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பாக எதிர்ப்புக் குரல் எழுப்பியிருந்தோம். இந்த முடிவை எதிர்த்து அந்தப் பகுதியில் கடையடைப்புகள், ஊர்வலங்கள் என போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

பவானி ஆற்றில் இருந்து தினசரி குளிர்பான உற்பத்திக்காக 20 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படும் என்ற ஒப்பந்தத்தையும் ரத்து செய்ய வேண்டுமென்று கோரியிருந்தோம். இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் அந்தப் பகுதியிலுள்ள 85 கிராமங்கள் பாலைவனமாக மாறும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தோம்.

இந்நிலையில் இதுகுறித்து சட்டமன்றத்தில் பிரச்சினை எழுப்பப்பட்டபோது அந்தப் பகுதியைச் சேர்ந்த அமைச்சர் தோப்பு என்.டி. வெங்கடாசலம், 'பெருந்துறை சிப்காட் வளாகத்தில் கோகோ கோலா நிறுவனத்திற்கு எந்த அனுமதியும் வழங்கவில்லை' என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற வகையில் பதில் கூறியிருந்தார்.

இதையொட்டி பத்திரிகையாளர் சந்திப்பின் மூலமாக கோகோ கோலா நிறுவனத்திற்கும், சிப்காட் தொழில் வளாக அதிகாரிக்கும் 15 மாதங்களுக்கு முன்பு போடப்பட்ட ஒப்பந்தத்தின் நகல்களை பகிரங்கமாக ஊடகத்துறையினருக்கு காங்கிரஸ் கட்சி சார்பாக வழங்கினோம்.

அதற்குப் பிறகுதான் திடீர் ஞானோதயம் ஏற்பட்டு மேற்படி ஒப்பந்தத்தை ரத்து செய்யப் போவதாக இப்போது தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியாளர்களும், கோகோ கோலா நிறுவனமும் சேர்ந்து ஊழல் சதியில் ஈடுபட்டு லஞ்ச வேட்டை நடத்த முற்பட்டதை விழிப்புணர்வோடு ஆதாரங்களை வெளியிட்ட காரணத்தினால் தான் இன்றைக்கு ஒப்பந்த்தம் ரத்து செய்யப்பட்டு, பெருந்துறை பகுதி மக்களின் உரிமைகள் காப்பாற்றப்பட்டிருக்கிறது.

சட்டமன்றத்தில் தவறான தகவல் வழங்கி, எல்லோரையும் ஏமாற்ற நினைத்த தமிழக அதிமுக அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார் இளங்கோவன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+