பொய் பேசிய "தோப்பு" மன்னிப்பு கேட்க வேண்டும்... ஈவிகேஎஸ் இளங்கோவன்
சென்னை: ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் கோகோ கோலா நிறுவனத்திற்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்று சட்டசபையில் பொய் பேசிய அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பெருந்துறை சிப்காட் தொழில் வளாகத்தில் பன்னாட்டு நிறுவுனமான கோகோ கோலா குளிர்பான தயாரிப்புக்காக ரூ.500 கோடி முதலீட்டில் தொடங்குவதற்கு தமிழக அரசு 72 ஏக்கர் நிலத்தை 99 ஆண்டு கால குத்தகைக்கு ஏக்கர் 1 ரூபாய்க்கு தரை வார்த்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பாக எதிர்ப்புக் குரல் எழுப்பியிருந்தோம். இந்த முடிவை எதிர்த்து அந்தப் பகுதியில் கடையடைப்புகள், ஊர்வலங்கள் என போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
பவானி ஆற்றில் இருந்து தினசரி குளிர்பான உற்பத்திக்காக 20 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படும் என்ற ஒப்பந்தத்தையும் ரத்து செய்ய வேண்டுமென்று கோரியிருந்தோம். இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் அந்தப் பகுதியிலுள்ள 85 கிராமங்கள் பாலைவனமாக மாறும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தோம்.
இந்நிலையில் இதுகுறித்து சட்டமன்றத்தில் பிரச்சினை எழுப்பப்பட்டபோது அந்தப் பகுதியைச் சேர்ந்த அமைச்சர் தோப்பு என்.டி. வெங்கடாசலம், 'பெருந்துறை சிப்காட் வளாகத்தில் கோகோ கோலா நிறுவனத்திற்கு எந்த அனுமதியும் வழங்கவில்லை' என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற வகையில் பதில் கூறியிருந்தார்.
இதையொட்டி பத்திரிகையாளர் சந்திப்பின் மூலமாக கோகோ கோலா நிறுவனத்திற்கும், சிப்காட் தொழில் வளாக அதிகாரிக்கும் 15 மாதங்களுக்கு முன்பு போடப்பட்ட ஒப்பந்தத்தின் நகல்களை பகிரங்கமாக ஊடகத்துறையினருக்கு காங்கிரஸ் கட்சி சார்பாக வழங்கினோம்.
அதற்குப் பிறகுதான் திடீர் ஞானோதயம் ஏற்பட்டு மேற்படி ஒப்பந்தத்தை ரத்து செய்யப் போவதாக இப்போது தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியாளர்களும், கோகோ கோலா நிறுவனமும் சேர்ந்து ஊழல் சதியில் ஈடுபட்டு லஞ்ச வேட்டை நடத்த முற்பட்டதை விழிப்புணர்வோடு ஆதாரங்களை வெளியிட்ட காரணத்தினால் தான் இன்றைக்கு ஒப்பந்த்தம் ரத்து செய்யப்பட்டு, பெருந்துறை பகுதி மக்களின் உரிமைகள் காப்பாற்றப்பட்டிருக்கிறது.
சட்டமன்றத்தில் தவறான தகவல் வழங்கி, எல்லோரையும் ஏமாற்ற நினைத்த தமிழக அதிமுக அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார் இளங்கோவன்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications