உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட 'ஆள்பிடிக்கும்' தேமுதிக.... திமுகவுக்கு தாவிய அருள்செல்வம் 'பொளேர்'

Subscribe to Oneindia Tamil

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களே இல்லாமல் 'ஆள்பிடிக்கும்' வேலையில் தேமுதிக இறங்கியுள்ளதாக அக்கட்சியின் முன்னாள் எம்எல்ஏவும் திமுகவுக்கு தாவியவருமான அருள்செல்வம் கூறியுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக விஜயகாந்த் அழைப்பை ஏற்று நேற்று சென்னை வந்தனர் தேமுதிக நிர்வாகிகள். ஆலோசனைக் கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேண்டாம் என அருள்செல்வம் உள்ளிட்டோர் கூறியுள்ளனர்.

Ex DMDK Mla Arulselvam slams Vijayakanth

இதில் அதிருப்தி அடைந்த விஜயகாந்த், தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று சொல்கிறவர்கள் கட்சியை விட்டு போய்விடலாம் என கூறினார். உடனே தேமுதிகவை விட்டு அருள்செல்வம் விலகி திமுகவில் ஐக்கியமாகிவிட்டது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அருள்செல்வம்,. நாங்கள் அனைவரும் விஜயகாந்த் என்பவரை நம்பித்தான் கட்சிக்குள் நுழைந்தோம். கட்சித் தலைமைக்குக் கட்டுப்பட்ட, மாவட்டத்தில் கட்சியை வளர்த்தோம்.

ஆனால், பின்னாளில் அது குடும்பக் கட்சியாக மாறிவிட்டது. மனைவி சொல்வதைத்தான் அவர் கேட்கிறார். இதனால் முக்கிய நிர்வாகிகள் அனைவரும், அவரைவிட்டு வெளியே போய்விட்டார்கள். உள்ளாட்சித் தேர்தலில் நிற்பதற்குக்கூட ஆள் தேடுகிறார்கள். இந்த சூழலில் அந்தக் கட்சி வளருமா? என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+