அதிமுக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரமூர்த்தி காலமானார்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: தமிழக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரமூர்த்தி உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 52. ஈஸ்வரமூர்த்திக்கு சுஜாதா என்ற மனைவியும், ஜெயசிம்மன், சஞ்சீவ் என்ற இரு மகன்களும் உள்ளனர்.

தாராபுரம் தனித் தொகுதி ஈரோடு மாவட்டத்துடன் இணைந்திருந்தபோது, 1991ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, கதர் மற்றும் கிராமத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.

Ex-minister Eswaramurthi passes away

இவரது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஆகும். ஈரோடு, காந்திஜி சாலையில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்த இவர் சில மாதங்களாக சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த ஈஸ்வரமூர்த்தி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார். அவரது உடலுக்கு அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல்தகனம் நேற்று ஈரோடு மின்மயானத்தில் நடந்தது.

மரணம் அடைந்த முன்னாள் அமைச்சர் பி.ஈஸ்வரமூர்த்திக்கு சுஜாதா என்ற மனைவியும், ஜெயசிம்மன், சஞ்சீவி என்ற 2 மகன்களும் உள்ளனர். ஜெயசிம்மன் கல்லூரியிலும், சஞ்சீவி பிளஸ்-2 வகுப்பிலும் படித்து வருகிறார்கள். ஈஸ்வரமூர்த்தி தற்போது ஈரோடு மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளராக இருந்துள்ளார். ஈஸ்வரமூர்த்தி மறைவுக்கு முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+