For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு.. வாட்ஸ் அப்பில் விருப்பம் தெரிவித்த கம்பம் முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புராயர்

முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆதரவு பெருகி வருகிறது. முன்னாள் எம்எல்ஏ சுப்புராயர் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

கம்பம்: கம்பம் முன்னாள் எம்எல்ஏ சுப்புராயர் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

சென்னை மெரினாவில் ஓபிஎஸ் வெளியிட்ட பகீர் தகவலை அடுத்து, சசிகலா மீது அதிருப்தியுள்ள அதிமுகவினர் ஓபிஎஸ்ஸை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், இந்நாள் எம்.பிக்கள் ஒ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

Ex.MLA Suburayar supports OPS

சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ ராஜமாணிக்கம், கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஆறுக்குட்டி, ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. மனோரஞ்சிதம், வாசுதேவநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. மனோகரன், ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ எஸ்.பி. சண்முகநாதன் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவை தெரிவித்துள்ளார். நேற்று, அதிமுகவின் அவைத் தலைவர் மதுசூதனன் ஓபிஎஸ்ஸை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

ஒவ்வொரு நாளும் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு அதிகரித்து வரும் நிலையில் இன்று சங்கரன்கோவில் முன்னாள் எம்எல்ஏ முத்துச்செல்வி ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கம்பம் முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புராயர் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

மேலும், ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக நீடிக்க வேண்டும் என்று சுப்புராயர் வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவித்துள்ளார்.

English summary
Cumbum Ex-MLA Suburayar extend his support to Chief Minister O.Pannerselvam today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X