லஞ்சப் புகாரில் சிக்கிய கலால்துறை பெண் கமிஷ்னர் ஜானகி அருண்குமார் கைது
லஞ்சப் புகாரில் சிக்கிய கலால்துறை பெண் கமிஷ்னர் ஜானகி அருண்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: இரண்டு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கிய சுங்கம் மற்றும் கலால்துறை உயர் அதிகாரி ஜானகி அருண்குமார் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் சுங்கத்துறை முதன்மை தலைமை ஆணையாளராக பணியாற்றி வந்தவர் ஜானகி அருண்குமார். இவர் சுங்கத்துறையில் பணி மாறுதலுக்கு லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது. மேலும் ஜானகி அருண் குமார் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார் வந்தது. அதன்பேரில் கடந்த 6 மாதங்களாக சிபிஐ போலீசார் ஜானகியின் நடவடிக்கையை கண்காணித்து வந்தனர்.
ஒரு அதிகாரியின் பணி மாறுதலுக்கு ரூ 2 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் சிபிஐ அதிகாரிகள் கொடுத்தனுப்பிய லஞ்சப் பணத்தை, சம்பந்தப்பட்ட அதிகாரி நேற்று முன்தினம் இரவு ஜானகியிடம் அவரது பாலவாக்கத்தில் உள்ள வீட்டில் வைத்து கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த சிபிஐ அதிகாரிகள் வீட்டுக்குள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.

அதை தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் ஜானகியின் வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட 7 இடங்களில் சோதனை நடத்தினர். இதை தொடர்ந்து ஜானகி அருண்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications