பல பெண்களுடன் தொடர்பு.... கண்டம்துண்டமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட பட்டதாரி: வீடியோ
பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த பட்டதாரி இளைஞரை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டிக்கொலை செய்துள்ளனர்.
வேலூர்: ஜோலார்பேட்டையை அடுத்துள்ள தாயலூர் கிராமத்தைச் சேர்ந்த லெட்சுமணன் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததால், அடையாளம் தெரியாதவர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
ஜோலார்பேட்டையை அடுத்துள்ள தாயலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லெட்சுமணன். இவருக்கு லாத என்பவருடன் திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை உண்டு. இந்நிலையில் லெட்சுமணன் தான் வேலை பார்க்கும் ஊரில் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகத் தெரிகிறது.

குறிப்பாக, கவிதா, வனிதா என்ற பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தார். அப்போது அவர் வனிதாவுடன் தனியாக இருசக்கர வாகனத்தில் செல்லும்போது அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தத் தகவலை அறிந்து வந்த போலீசார், லெட்சுமணன் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்குப் பதிவு செய்து கொலையளிகளைத் தேடி வருகின்றனர். தமிழகத்தில் நடக்கும் கொலைகளில் திருமணத்தை மீறிய உறவால் ஏற்படும் பிரச்சனைகளால் தான் அதிக அளவு கொலைகள் நடக்கிறது.












Click it and Unblock the Notifications