நாளை வைகாசி சுபமுகூர்த்தம்! சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள்
சென்னை: வைகாசி மாதம் சுபமுகூர்த்த தினம் என்பதால் நாளை அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பத்திரப்பதிவு துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வைகாசி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு!

சுபமுகூர்த்த தினங்கள் கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப் பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தற்போது வைகாசி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினமான 29.05.2026 அன்று அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
எனவே வைகாசி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினமான 29.05.2026 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும், இரு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும். 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும். 12 தட்கல் முன்பதிவு வில்லைகள் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு பதிவுத் துறையின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, மாநிலம் முழுவதும் மொத்தம் 595 சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
நிர்வாக வசதிக்காக ஒட்டுமொத்த தமிழ்நாடும் 11 மண்டலங்களாகப் (Registration Zones - சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை போன்றவை) பிரிக்கப்பட்டு, அதன் கீழ் இந்த அலுவலகங்கள் தங்களின் சேவைகளை வழங்கி வருகின்றன.
சார்பதிவாளர் அலுவலகங்களின் முக்கிய பயன்பாடுகள் (Uses)
பொதுமக்கள் தங்களின் வாழ்நாளின் முக்கிய ஆவணங்களைச் சட்டப்பூர்வமாக்க இந்த அலுவலகங்களை நாடுகின்றனர். இதன் முதன்மைப் பயன்பாடுகள் பின்வருமாறு:
சொத்துப் பதிவுகள் (Property Registration): வீடு, விளைநிலம், காலி மனை போன்ற அசையாச் சொத்துக்களை வாங்குதல் மற்றும் விற்கும் போது உருவாக்கப்படும் 'கிரையப் பத்திரம்' (Sale Deed) இங்குதான் பதிவு செய்யப்படுகிறது.
பாகப்பிரிவினை மற்றும் தானப் பத்திரங்கள்: குடும்ப உறுப்பினர்களுக்குள் சொத்துக்களைப் பிரித்துக் கொள்ளும் 'பாகப்பிரிவினை பத்திரம்' (Partition Deed) மற்றும் சொத்துக்களைப் பரிசாக வழங்கும் 'தானப் பத்திரம்' (Gift/Settlement Deed) ஆகியவை இங்கு பதிவு செய்யப்படுகின்றன.
வில்லங்கச் சான்றிதழ் (Encumbrance Certificate - EC): ஒரு சொத்து கடந்த காலங்களில் யார் யாருக்கு கைமாறியது, அதில் ஏதேனும் கடன்/வில்லங்கம் உள்ளதா என்பதை அறிய உதவும் வில்லங்கச் சான்றிதழ் இங்கிருந்துதான் பெறப்படுகிறது.
திருமணப் பதிவுகள் (Marriage Registration): இந்து திருமணச் சட்டம், சிறப்பு திருமணச் சட்டம் மற்றும் தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நடக்கும் திருமணங்கள் இங்குச் சட்டப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
சங்கங்கள் மற்றும் அறக்கட்டளைப் பதிவு: புதிய பொதுநலச் சங்கங்கள் (Societies), தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளைப் (Trusts) பதிவு செய்யும் பணிகளும் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன.
முத்திரைக் கட்டண வருவாய்: அரசின் முக்கிய வருவாய் ஆதாரங்களில் ஒன்றான முத்திரைக் கட்டணம் (Stamp Duty) மற்றும் பதிவுக் கட்டணங்கள் (Registration Fees) இந்த அலுவலகங்கள் மூலமாகவே வசூலிக்கப்படுகின்றன.
டிஜிட்டல் மயம்: தற்போது பொதுமக்கள் அலைச்சலைக் குறைக்கும் வகையில், 'டிஎன்ரெஜினெட்' (TNREGINET) இணையதளம் மூலமாக ஆன்லைனில் டோக்கன் முன்பதிவு செய்து, குறிப்பிட்ட நேரத்தில் சென்று ஆவணங்களைப் பதிவு செய்யும் வசதியைத் தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications