For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெல்லை: போலி போலீஸ் அதிகாரி கைது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் போலீஸ் அதிகாரிபோல சுற்றிவந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Fake police arrest in Nellai

நெல்லைமாவட்டம் இராதாபுரம் பகுதியில் போலீஸ் அதிகாரி போல் உடை மற்றும் தொப்பி அணிந்து ஒருவர் வலம் வருவதாக தனிபிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து நெல்லை மாவட்ட தனிபிரிவு போலீசார் அந்த நபரை பிடிக்க கண்காணித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை ராதாபுரத்தில் வைத்து ராதாபுரம் காவல் நிலைய தனிபிரிவு போலீசார் அந்த நபரை பிடித்து ராதாபுரம் காவல்நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்தனர்.

அப்போது அவர் அஞ்சுகிராமம் அருகே உள்ள தெற்கு கருங்குளத்தை சேர்ந்த கணபதி மகன் சுபாஷ்சந்திரபோஸ் (26) என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

English summary
Nellai district police arrested a fake police officer in Radhapuram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X