போலீஸ் இன்ஸ்பெக்டர் எனக்கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இன்ஸ்பெக்டர் என கூறி பணம், நகைக்களை மோசடி செய்த பட்டதாரி பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

திருப்புவனம் கீழரத வீதியில் முனியசாமி என்பவர் மனைவி ஜான்சிராணி (31) வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். பிஎஸ்சி பட்டதாரியான இவர் திருப்புவனத்தில் உள்ள சுதா ஜுவல்லர்ஸ் என்ற நகைகடையில் திண்டுக்கல்லில் பெண் இன்ஸ்பெக்டராக இருப்பதாக கூறி அறிமுகமாகியுள்ளார். தனக்கு நகை வேண்டும் என கூறி கடந்த மே மாதம் ஒரு பவுன் செயின், ஒரு ஜோடி கொலுசு, வெள்ளி அரைஞான் கயிறு, அரை பவுன் தோடு, அரை பவுன் மோதிரம் வாங்கியுள்ளார்.
இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 49,000. இதில் ரூ. 10,000 மட்டும் கொடுத்துவிட்டு மீதி பின்னால் தருவதாக கூறியுள்ளார். ஆனால் சொன்னபடி தரவில்லை.நகை கடை உரிமையாளர் கண்ணன் கேட்டதற்கு இன்ஸ்பெக்டரிடமே பணம் கேட்கிறாயா என மிரட்டியுள்ளார்.
இதனை தொடர்ந்து கண்ணன் திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். விசாரணைக்கு வக்கீலுடன் வந்த ஜான்சிராணி இன்ஸ்பெக்டரிடம் தான் திண்டுக்கல் இன்ஸ்பெக்டர் என கூறி கையை குலுக்கியுள்ளார்.
இன்ஸ்பெக்டர் ராஜ்குமாரிடம் விசாரணையின் போது கோவை உக்கடத்தில் 2004ல் பணிபுரிந்ததாக கூறியுள்ளார். ஆனால் அந்த சமயத்தில் உக்கடத்தில் எஸ்ஐயாக இருந்தவர்
இதே ராஜ்குமார். எந்த பிரிவு என கேட்க குற்றப்பிரிவு என கூறியுள்ளார். இன்ஸ்பெக்டராக எப்படி பதவி உயர்வு பெற்றீர்கள் என கேட்க சிறப்பு பதவி உயர்வு என கூறியுள்ளார். தொடர் விசாரணையில் பல இடங்களில் இப்படி இன்ஸ்பெக்டர் என கூறி மிரட்டியது தெரியவந்துள்ளது.

ஜான்சிராணிக்கு மதுரை சம்மட்டிபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கருப்பையாவுடன் ஏழு வருடங்களுக்கு முன் திருமணம் நடந்து ஒரு ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் உள்ளது.
இரண்டு குழுந்தைகளையும் மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் தினசரி கொண்டு போய்விடும் போது அங்கு ஆசிரியராக பணியாற்றிய முனியசாமியை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.
ஜான்சிராணியின் சொந்த ஊர் உசிலம்பட்டி அருகே உள்ள மானூத்து ஆகும். எப்போதும் சொகுசு காரில்தான் வலம் வருவார். திருப்புவனத்தில் பலரிடமும் வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கி மோசடி செய்துள்ளதாக தெரிகிறது.திருப்புவனம் போலீசார் முதலில் நகைகடை உரிமையாளர் கண்ணனின் புகாரின் பேரில் கைது செய்துள்ளனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications