ஒரு வாரம் 'டைம்' கிடைத்திருந்தால் முக்கியத் தலைவரை வீழ்த்தியிருப்போம்.. பக்ருதீன்

Subscribe to Oneindia Tamil

Fakruddin gives startling statement to police
வேலூர்: இன்னும் ஒரு வாரம் மட்டும் நாங்கள் பிடிபடாமல் இருந்திருந்தால் இந்து முன்னணியின் முக்கியத் தலைவரைத் தீர்த்துக் கட்டியிருப்போம். இந்து முன்னணியின் ஆணிவேராகத் திகழும் அவரைச் சாய்த்திருப்போம் என்று பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார் போலீஸ் பக்ருதீன்.

சிபிசிஐடி போலீஸாரின் விசாரணையின்போது இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார் பக்ருதீன். இதுகுறித்து அவர் கூறுகையில், வேலூர், குடியாத்தம், பேரணாம்பட்டு, ஆம்பூர், அன்வர்திகான் பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் நாங்கள் சுற்றியிள்ளோம். அப்போது இந்து மதவளர்ச்சியில் ஈடுபடும் நபர்களின் செயல்பாடுகளை கண்காணித்து வந்தோம்.

ஒவ்வொரு கொலையையும் நடத்தி முடித்த பிறகு, கிடைக்கும் வேலைகளை செய்து வந்தோம். பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் கூலி வேலை கூட பார்த்துள்ளனர்.

எங்கள் இலக்கு இந்து மதத் தலைவர்களை தீர்த்துக்கட்டுவதுதான், இன்னும் ஒரு வாரம் விட்டு இருந்தால் இந்து முன்னணியின் ஆணிவேராக விளங்கும் முக்கிய தலையை சாய்த்திருப்போம். அதற்கான ஏற்பாடுகளை சென்னையில் தங்கி செய்து வந்தேன். அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும்போது தான் போலீஸ் வலையில் சிக்கினேன்.

ஒரு வேளை போலீஸ் எங்களை கைது செய்யாமல் இருந்திருந்தால் அடுத்த கொலையை பற்றித்தான் தமிழகம் முழுவதும் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு இருக்கும் என்று அவர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யார் அந்த இந்து முன்னணித் தலைவர் என்று தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான ராம கோபாலனாக அவர் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. காரணம், சமீபத்தில்தான் இவருக்குப் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+