குடியை கெடுத்த குடி .. உலக்கையால் மனைவியை அடித்துக் கொன்ற கணவர்
மனைவியை உலக்கையால் அடித்த கணவன் போலீசில் சரண் அடைந்தார்.
Recommended Video

தூத்துக்குடி: குடிகாரர்களின் அட்டகாசமும், வன்முறைகளும் பெருகி கொண்டே வருகிறது. குடி குடியை கெடுக்கும் என்பது நாளுக்கு நாள் நூற்றுக்கு நூறு நிரூபணமாகி கொண்டே வருகிறது. குடியால் சீரழிந்த ஒரு குடும்பத்தின் சம்பவம் இது.
தூத்துக்குடி தாய் நகர் சிலோன் காலனியை சேர்ந்தவர் மோட்ச ராணி. இவரது கணவர் சண்முகசுந்தரம். இவருக்கு முக்கியமான வேலையே காலையில் எழுந்ததும் மது குடிப்பதுதான். எங்கேயும் வேலை வெட்டிக்கு போவது கிடையாது. மனைவிதான் வேலைக்கு செல்வார். கடற்கரையில் மீன் வெட்டிக் கொடுக்கும் வேலைதான் மனைவிக்கு குடும்பம் நடத்த உதவுகிறது. இந்த பணத்தை குடிப்பதற்கு மனைவியிடம் கேட்பார் சண்முகசுந்தரம்.

குடிப்பதற்கு மனைவி பணம் தந்தே ஆக வேண்டும். இல்லையென்றால் எப்போதுமே சண்டைதான், தகராறுதான். இந்த லட்சணத்தில் குடிகார சண்முகசுந்தரத்திற்கு 51 வயதாகும் தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகம் வேறு. ஒன்று குடிப்பதற்கு பணம் தந்துவிட வேண்டும், இல்லையென்றால் நடத்தையில் சந்தேகப்பட்டு வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசி அமர்க்களம் செய்வது. இதுதான் எந்நேரமும் நடந்துள்ளது.
இந்நிலையில் நேற்றிரவும் சண்முகசுந்தரம் குடித்துவிட்டு மனைவியிடம் சண்டை ஆரம்பித்துள்ளார். விடிய விடிய சண்டை. இன்று அதிகாலை 4 மணியளவில் வீட்டிலிருந்த உலக்கையை கொண்டு வந்து சண்முகசுந்தரம் மனைவி தலையில் ஓங்கி அடிக்க தொடங்கினார். இதில் வெள்ளமாய் ரத்தம் ஓட, அங்கேயே பிணமானார் மோட்சராணி.
பின்னர், கொலை செய்த கணவர் நேராக தாளமுத்து நகர் காவல்நிலையத்தில் வந்து சரணடைந்துவிட்டார். தற்போது போலீசார் மோட்சராணியின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications