வாரிசு அரசியல் தான் திமுகவின் சமூகநீதி.. போட்டுத்தாக்கும் தமிழிசை சவுந்தரராஜன்
வாரிசு அரசியல் தான் திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் சமூக நீதி என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: வாரிசு அரசியல் தான் திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் சமூக நீதி என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக, பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகளை தமிழக பாஜக தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் கடுமையாக தாக்கி தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். பாஜகவுக்கு எதிராக கருத்துக் கூறியிருந்த ஸ்டாலினையும் தமிழிசை வெளுத்து வாங்கியுள்ளார்.
காலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழிசை காரசாரமான பதிவுகளை பதிவிட்டுள்ளார். ஸ்டாலினுக்கு எதிராக பல்வேறு கேள்விகளையும் அவர் எழுப்பியுள்ளார்.
அணைகள் கட்டினாரா?
அதாவது, திமுகஆட்சியில் ஸ்டாலின் தனியார் ஆங்கிலப் பள்ளி கட்டியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். பொறியியல்,மருத்துவக்கல்லூரிகள் கட்டியதாகவும் தமிழிசை சவுந்தரராஜன் சாடியுள்ளார். ஸ்டாலின் தண்ணீருக்காக அணைகள் கட்டினாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எங்கே எதிர்த்தோம்? பொய்யர்களே?
மோடி அரசுக்கு எதிராக கீழடி பற்றி பேசிய ஸ்டாலின், கம்யூனிஸ்டுகள் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் தமிழிசை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தாங்கள் கீழடி அகழாய்வு பணியை எங்கே எதிர்த்தோம்? பொய்யர்களே? என்றும் தமிழிசை விளாசியுள்ளார்.
இலங்கை இறுதிப்போரில்
"நீட் தேர்வு"-நம்ப வைத்து கழுத்தறுத்த மத்தியரசு என ஸ்டாலின் கூறியதற்கும் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை இறுதிப்போரில் போர் நின்றுவிடும் என நம்பவைத்து சரண் அடைய செய்தது திமுக ஆட்சிதான் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
வாரிசு அரசியல்தான் சமூகநீதி?
வாரிசு அரசியல் குடும்ப ஆட்சிதான் திமுக, திக, பாமக பேசும் சமூக நீதி? என்றும் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார். மக்களை ஏமாற்றவா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.