பிரபல நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் ஞாபகமிருக்கா? ஸ்டாலினிடம் மேஜர் கோரிக்கை.. "பெரியவர் ராமானுஜர்"..செம
சென்னை: இந்து மதத்தை காப்பாற்றி, அதை எல்லாருக்கும் போய் சேர வேண்டும் என்று ஆயிரம் வருடங்களுக்கு முன்பேயே பாடுபட்டவர் ஸ்ரீராமானுஜர் என்று பிரபல நடிகர் ஒய்ஜி மகேந்திரன் நெகிழ்ந்து கூறினார்.. அத்துடன், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
HYAGREEVA CINE ARTS பட நிறுவனம் சார்பில் ஸ்ரீ இராமானுஜர் படம் தயாராகி உள்ளது.. கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்து அந்த காலக்கட்டத்திலேயே ஆன்மீகத்தில் சமூக புரட்சி செய்தவர் ராமானுஜர். அவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில், தயாரிப்பாளர் T.கிருஷ்ணன் என்பவரே, இராமானுஜராகவும் நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் ராதாரவி, ஒய்ஜி மகேந்திரன், ஸ்ரீமன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ளது. இப்படத்தின் முதல் பாடல் மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.இதில் நடிகர் ராதாரவி பேசியபோது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து சிலாகித்து பேசியிருந்தார்.
நடிகர் ராதாரவி: அவரை தொடர்ந்து ஒய்ஜி மகேந்திரன் பேசும்போது, "இந்த படத்திலேயே அதிக வயதானவன் நான்தான்.. 300 படங்களில் நடித்திருக்கிறேன்.. 50 வருடமாக நடித்து வருகிறேன்.. ஆனால், இந்த படத்தில் நடித்ததை பெருமையாக கருதுகிறேன்.. இந்த படத்தை பற்றி சொல்லவே ஒரு தகுதி வேண்டும், பாக்கியம் வேண்டும்.. இந்த வாய்ப்பை எனக்கு தந்ததே டைரக்டர் கிருஷ்ணர்தான்.. இன்னொரு விஷயத்தையும் இங்கே சொல்லிடறேன்.. இந்த படத்தில் அவர்தான் ராமானுஜராக நடிக்கிறார்.. அவர் அப்படி நடிக்க மூல காரணமே நான்தான்..
நீங்களே அந்த ரோலை பண்ணிடுங்களேன் என்றேன்.. அதனால், அந்த ரோல் நல்லா இருந்தாலும் நான்தான் பொறுப்பு. நல்லா இல்லை என்றாலும் நான்தான் பொறுப்பு.. இந்த படம் கமர்ஷியலா போகும் என்றெல்லாம் சொல்லவே வேண்டாம்.. இது நம்முடைய நாட்டுக்கு, நமது சமுதாயத்துக்கு, நமது இளைஞர்களுக்கு சொல்லப்பட வேண்டிய ஒரு படம்.. இது புராணம் இல்லை.. இது சரித்திரம்,.. ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்து, சாதனை புரிந்த ஒரு மககானை பற்றி எடுத்திருக்கிற படம்..

சீர்திருத்தம் : அவர் அன்றைய காலம் எவ்வளவு கஷ்டப்பட்டோரோ, அதைவிட அதிகமாக இந்த படத்தை வெளிவர டைரக்டர் கிருஷ்ணன் அதிக கஷ்டப்பட்டுள்ளார்.. நம்ம காலத்தில்தான், அதாவது 60, 70 வருடங்களாகத்தான், சீர்திருத்தம், சமுதாய ஒற்றுமை, பகுத்தறிவு இதெல்லாம் இருப்பதாக நாம நினைத்து கொண்டிருக்கிறோம்.. நமக்கு தெரிந்த காலகட்டம் என்பதால் அப்படி நினைக்கிறோம்.. ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பேயே, மதம் என்பது மதம் பிடிப்பதற்கு கிடையாது என்பதை வலியுறுத்தியவர் ராமானுஜர்.
ஒரு குரு என்பவன் எப்போது முழுமையடைகிறான் தெரியுமா? தனக்கு தெரிந்த எல்லாவற்றையும், பிறருக்கு சொல்லி கொடுக்கும்போதுதான் முழுமையாடைகிறான் என்பதை சொல்லி தந்த முதல்குரு ஸ்ரீராமானுஜர்தான்.. என்னுடைய அம்மா, தன்னுடைய 75 வயதில், பிஎச்டி பண்ணாங்க.. அப்போது அவருடைய சப்ஜெக்ட்டே ராமானுஜர்தான்.. அதனால், நிறைய விஷயங்களை எனக்கு என் அம்மா சொல்லுவார்..
ஒய்ஜி மகேந்திரன்: குலம் - வேறுபாடு, ஏழை - பணக்காரன், ஏற்றம் - இறக்கம் இதெல்லாம் ராமானுஜரிடம் கிடையாது, எல்லாரும் கடவுள் முன்பு சமம் என்ற புரட்சியை ஆயிரம் வருடங்களுக்கு முன்பேயே செய்த பெரியவர்தான் ஸ்ரீராமானுஜர். இவருக்கு பிறகுதான், மற்றவர்கள் சீர்திருத்தங்களை பேசினார்கள்.. கலைஞர் டிவியில்கூட, இவரை பற்றி சீரியலாகவும் எடுத்து வெளியிட்டிருந்தார்கள்.. ராமானுஜர் இந்து மதத்தை எப்படி காப்பாற்றினார் என்பதையும், இந்து மதம் எல்லாருக்கும் போய் சேரணும் என்றும் ராமானுஜர் பாடுபட்டிருக்கிறார்..

இந்தக் கால இளைஞர்களுக்கு இந்தப் படத்தை கொண்டுபோய் சேர்க்க வேண்டிய பொறுப்பு பத்திரிகையாளர்களுக்கு இருக்கிறது. இதுவும் சீர்திருத்த படம்தான். அரசும் இதில் பங்கெடுத்து கொள்ள வேண்டும்.. இந்தப் படத்தை எல்லோரும் பார்க்கும் விதமாக தமிழக அரசும் உதவி செய்ய வேண்டும்.. அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இந்த படம் திரையிட வேண்டும் என்று இந்த நேரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு நான் வேண்டுகோள் வைக்கிறேன்.. மற்ற சீர்திருத்த படங்களை செய்வதைபோலவே, பட்டவர்த்தனமாகவே முதல்வருக்கு இந்த கோரிக்கையை வைக்கிறேன்" என்றார் ஒய் ஜி மகேந்திரன்.
நடிகர் ராதாரவி: ஒய்ஜியை தொடர்ந்து, நடிகர் ராதாரவி பேசவந்தார்.. அப்போது, "முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று ஒய்ஜி மகேந்திரன் சொல்கிறார்.. நீ சொல்லவே தேவையில்லை.. அவங்க அப்பா ஏற்கனவே ராமானுஜரை பற்றி எழுதியிருக்கிறார்.. அதனால், முதல்வரும் இந்த புத்தகத்தை கண்டிப்பாக படிப்பார்.. இந்த படத்தை அவர் பார்த்தால், ராமானுஜராகவே இந்த படத்தில் வாழ்ந்துள்ளவருக்கு பெரிய அவார்டு காத்திருக்கிறது" என்று மகிழ்ச்சி பொங்க வாழ்த்தியிருந்தார் ராதாரவி.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications