எல்லா ஊரு பஞ்சாயத்துக்கும் போகும் அதிமுகவின், 'குண்டு குழந்தை' ! இப்போ எடப்பாடி அணிக்காக குத்தாட்டம்
Recommended Video

சென்னை: அதிமுகவில் எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் அதில் நடு நாயகமாக இருப்பவர்கள் தொண்டர்கள்.
ஜெயலலிதா சிறைக்கு சென்றபோது அழுது ஆர்ப்பரித்தார்கள், வெளியே வந்தபோது குத்தாட்டம் போட்டனர். இப்படி தொண்டர்களின் அழுகை, சோகம், ஆவேசம், மகிழ்ச்சி என ஒரு நவரசங்களை குடோன் கணக்கில் வைத்துள்ள கட்சி அதிமுக.

புகைப்படங்கள், வீடியோக்கள் என இந்த தொண்டர்கள் ஊடகங்களில் முக்கிய இடத்தை பிடிப்பார்கள். இப்படித்தான் ஜெயலலிதா படம் போட்ட பெரிய மோதிரம், கழுத்து நிறைய நகைகள் என ஒரு குண்டு தொண்டர் இதில் முக்கியமாக கவனம் ஈர்ப்பார்.
இவரை அதிமுகவினர் செல்லமாக 'குண்டு குழந்தை' என பெயர் சூட்டி அழைப்பார்கள். ஆனால் இப்போது விஷயம் அதுவல்ல. இவர் சிலல நாட்கள் முன்புவரை தினகரன் அணிக்காக ஆடிப்பாடி வந்தார்.
ஆனால் இன்றோ, இரட்டை இலை சின்னம் எடப்பாடி, பன்னீர்செல்வம் அணிக்கு கிடைத்துள்ளதாக தகவல் வெளியானதும், அதிமுக அலுவலகம் அருகே அவர்களுக்கு ஆதரவாக குத்தாட்டம் போட்டார்.
இதை பார்த்த பத்திரிகையாளர்கள், "இவரு எல்லா ஊரு பஞ்சாயத்துக்கும் போய் வருவாரு போல" என சிரித்துக்கொண்டனர்.












Click it and Unblock the Notifications