நாகை அருகே தற்கொலை செய்த முருகையன் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற மற்றொரு விவசாயி மரணம்
தற்கொலை செய்த விவசாயி ஒருவரின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட மற்றொரு விவசாயி மாரடைப்பால் மரணம்.
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டினம்: நெற் பயிர்கள் கருகியதால் தற்கொலை செய்து கொண்ட முருகையனின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற மற்றொரு விவசாயி பாலசுப்பிரமணியன் மாரடைப்பால் இடுகாட்டிலேயே மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போதுமான மழை பெய்யாதது; காவிரி நீரை கர்நாடகா திறந்துவிடாதது போன்ற காரணங்களால் காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பொய்த்துப் போனது; இதனால் மனமுடைந்து போன விவசாயிகள் அதிர்ச்சியில் உயிரிழப்பதும் தற்கொலை செய்வதும் தொடர் கதையாகிவிட்டது.

நாகை அருகே தலைஞாயிறைச் சேர்ந்த விவசாயி முருகையன் நேற்று தற்கொலை செய்து கொண்டார். அவரது இறுதி ஊர்வலம் இன்று நடைபெற்றது.
இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட மற்றொரு விவசாயி பாலசுப்பிரமணியன் இடுகாட்டிலேயே மாரடைப்பால் காலமானார். இச்சம்பவம் டெல்டா விவசாயிகளை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications