வங்கி கடனை கட்ட முடியல… பயிரும் கருகிடுச்சி.. வேதனையில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை
பயிர்கள் காய்ந்துவிட்டதால், வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாத மன வேதனையில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர்: வங்கிக் கடனை திருப்பி செலுத்த முடியாததால் வேதனையில் விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகில் உள்ளது செங்கராயன்கட்டளை. இந்த கிராமத்தில் வசித்து வந்தார் விவசாயி ரகுபதி. இவர் வங்கியில் கடன் வாங்கி விவசாயம் செய்துள்ளார். மேலும் தனி நபர்கள் சிலரிடமும் கடன் வாங்கி பயிர் சாகுபடி செய்திருந்தார்.

இந்நிலையில், உரிய தண்ணீர் இல்லாததால் வறட்சி ஏற்பட்டு பயிர் முற்றிலும் கருகியது. அதனால் பெரும் மன வேதனையில் விவசாயி பாதிக்கப்பட்டிருந்தார். இதனிடையே, வங்கி அதிகாரிகள், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று நெருக்கடி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே மனம் உடைந்த நிலையில் காணப்பட்ட ரகுபதி, வங்கி அதிகாரிகள் நெருக்கடி கொடுத்ததால், கடந்த 15ம் தேதி பயிர்களுக்கு தெளிப்பதற்காக வாங்கி வைத்திருந்த பூச்சிக் கொல்லி மருந்தை எடுத்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
விஷம் குடித்தது தெரிந்த உடன் உறவினர்கள் அவரை உடனடியாக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications