பயிர்காப்பீடு வழங்குவதில் குளறுபடி: திண்டுக்கல் விவசாயிகள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்
பயிர்காப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்: பயிர்க்காப்பீடு தொடர்பாக தங்களுக்கு உரிய பதிலை வழங்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். அத்துடன் வாயில் கருப்பு துணி கட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 2016-ம் ஆண்டுமுதல் தமிழகம் வறட்சி சூழ்நிலையை சந்தித்து வருவதால், விவசாயிகளின் நலனுக்காக பயிர் காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டது.

இதில் பழனியை அடுத்த தொப்பம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திருந்தனர். இவர்களுக்கு நிவாரண தொகை 1 ரூபாயிலிருந்து 10 ரூபாய் வரை காசோலை வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த அவர்கள், இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
இந்நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர். அப்போது தங்களது பயிர்க்காப்பீட்டு தொகை குறைந்த அளவே வந்துள்ளதையும் 7,377 பேருக்கு இன்னும் காப்பீட்டு தொகையே வரவில்லை என்றும் முறையிட்டனர்.
இதற்கு ஆட்சியர் மற்றும் அதிகாரிகள், இந்த விவகாரத்தில் எங்களது பணியை முடித்துவிட்டோம், இதற்கு மேல் இன்சூரன்ஸ் கம்பெனிதான் பயிர்காப்பீட்டு தொகை பற்றி முடிவு செய்ய வேண்டும் என்று பதிலளித்தனர்.
தங்களுக்கு உரிய பதில் கிடைக்காத காரணத்தினால், விவாசயிகள் ஆத்திரமடைந்தனர். இதனால் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் அலுவலக வளாகத்தில் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு,உடனடியாக காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என முழக்கமிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications