பயிர்காப்பீடு வழங்குவதில் குளறுபடி: திண்டுக்கல் விவசாயிகள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்
பயிர்காப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்: பயிர்க்காப்பீடு தொடர்பாக தங்களுக்கு உரிய பதிலை வழங்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். அத்துடன் வாயில் கருப்பு துணி கட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 2016-ம் ஆண்டுமுதல் தமிழகம் வறட்சி சூழ்நிலையை சந்தித்து வருவதால், விவசாயிகளின் நலனுக்காக பயிர் காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டது.

இதில் பழனியை அடுத்த தொப்பம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திருந்தனர். இவர்களுக்கு நிவாரண தொகை 1 ரூபாயிலிருந்து 10 ரூபாய் வரை காசோலை வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த அவர்கள், இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
இந்நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர். அப்போது தங்களது பயிர்க்காப்பீட்டு தொகை குறைந்த அளவே வந்துள்ளதையும் 7,377 பேருக்கு இன்னும் காப்பீட்டு தொகையே வரவில்லை என்றும் முறையிட்டனர்.
இதற்கு ஆட்சியர் மற்றும் அதிகாரிகள், இந்த விவகாரத்தில் எங்களது பணியை முடித்துவிட்டோம், இதற்கு மேல் இன்சூரன்ஸ் கம்பெனிதான் பயிர்காப்பீட்டு தொகை பற்றி முடிவு செய்ய வேண்டும் என்று பதிலளித்தனர்.
தங்களுக்கு உரிய பதில் கிடைக்காத காரணத்தினால், விவாசயிகள் ஆத்திரமடைந்தனர். இதனால் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் அலுவலக வளாகத்தில் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு,உடனடியாக காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என முழக்கமிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications