கொந்தளித்த தமிழகம்- மறியல் போராட்டங்களால் ரயில் போக்குவரத்து கடும் பாதிப்பு- லட்சக்கணக்கானோர் கைது!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து இன்று விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள் இணைந்து நடத்திய ரயில் மறியல் போராட்டத்தால் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும் உடனே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் தமிழகம் முழுவதும் விவசாயிகள் இன்று முதல் 48 மணி நேர தொடர் ரயில் மறியல் போராட்டத்தில் குதித்துள்ளனர். திமுக, காங்கிரஸ், மக்கள் நலக் கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்து இந்த மறியல் போராட்டத்தில் குதித்துள்ளன.

Farmers rail roko hit services in TN

திமுக பொருளாளர் முக ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், இடதுசாரி தலைவர்கள் ஜி. ராமகிருஷ்ணன், முத்தரசன், நல்லகண்ணு உள்ளிட்டோர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி உள்ளனர். பல இடங்களில் விவசாய சங்கத்தினர் ரயில்வே தண்டவாளங்களில் குடியேறும் போராட்டத்தை நடத்தினர்.

தமிழகம் முழுவதும் 1,00,000க்கும் அதிகமானோர் ரயில் மறியலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இம்மறியல் போராட்டங்களில் தமிழகத்தில் ரயில் போக்குவரத்து மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பல ரயில்கள் மிகவும் தாமதமாக இயக்கும் நிலை உருவானது. நாளையும் இம்மறியல் போராட்டம் தொடர உள்ளதால் 2வது நாளாக ரயில் சேவை பாதிக்க வாய்ப்புள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+