துணை ராணுவத்தை அனுப்பி கர்நாடக அணைகளை திறக்குமா மத்திய அரசு.. தமிழக விவசாயிகள் ஏக்கம்
தமிழக தலைமைச் செயலகத்தில் துணை ராணுவ உதவியோடு வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதே பாணியை கர்நாடகாவிலும் மத்திய அரசு காட்டுமா என கேள்வி எழுப்புகிறார்கள் விவசாயிகள்.
சென்னை: துணை ராணுவத்தை அனுப்பி கர்நாடகாவிலுள்ள அணைக்கட்டுகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
காவிரியில் கர்நாடகா இந்த வருடம் உரிய அளவுக்கு தண்ணீர் தராததாலும், மழை பொய்த்துப்போனதாலும், டெல்டா மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தூக்கிட்டும், அதிர்ச்சியும் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் காவிரி பங்கீடு குறித்த வழக்கு விசாரணை வந்தபோது, பிப்ரவரி 7ம் தேதி முதல் தினமும் வழக்கு விசாரிக்கப்படும் என்றும் அதுவரை தினமும் தமிழகத்திற்கு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீரை திறக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

நிறைவேற்றாத கர்நாடகா
ஆனால், கர்நாடகா இதற்கு முன்பும் சுப்ரீம் கோர்ட் இதுபோல பிறப்பித்த உத்தரவை இன்னமும் நிறைவேற்றவில்லை. இந்த உத்தரவையும் நிறைவேற்ற முடியாத சூழல் உள்ளதாக அதன் நீர்வள அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறிவிட்டார். இந்த சூழ்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மத்திய அரசு தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், அல்லது அதற்கான நெருக்கடியை தமிழக அரசு கொடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

தமிழகத்தில் துணை ராணுவம்
தமிழக தலைமைச் செயலகத்தில் துணை ராணுவ உதவியோடு வருமான வரித்துறை சோதனை நடத்தியது. தலைமைச் செயலர் ராம மோகனராவ் வீட்டிலும் இப்படி சோதனை நடந்தது. மாநில போலீசாராலோ அரசாலோ அதை எதிர்க்க முடியவில்லை. எனவே இதே பாணியை கர்நாடகாவிலும் மத்திய அரசு காட்டுமா என கேள்வி எழுப்புகிறார்கள் விவசாயிகள்.

பிசிசிஐக்கு நேர்ந்த கதி
உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத பிசிசிஐ அமைப்பை ஏறத்தாழ கலைத்தே விட்டது உச்சநீதிமன்றம். தலைவர், செயலாளர் பதவிகளில் இருந்தவர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். கர்நாடகாவும் தொடர்ந்து ஒரு காரணத்தை கூறி தண்ணீர் திறக்க மறுப்பதால் துணை ராணுவத்தை அனுப்பி கே.ஆர்.எஸ் உள்ளிட்ட அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பை மத்திய அரசே மேற்கொள்ளலாமே என்பது விவசாயிகள் ஆதங்கம்.

விவசாயிகள் கேட்கிறார்கள்
உச்சநீதிமன்றம் உத்தரவிடாமல் மத்திய அரசு தானாக முன்வந்து இப்படி நடவடிக்கை எடுப்பது நடைமுறையில் சாத்தியக்குறைவான செயல். ஆனால், தலைமைச் செயலகத்தில் சோதனையிடும்போது காட்டிய ஆர்வத்தை விவசாயிகள் சாவதை தடுப்பதிலும் மத்திய அரசு காண்பிக்க வேண்டும் என்பதே விவசாயிகள் கோரிக்கை. ஏனெனில், மாநில சுய ஆட்சி கொள்கையை கொண்ட திராவிட கட்சிகளால் ஆளப்பட்டு, ஆளப்படும் தமிழகத்திலேயே துணை ராணுவத்தை நிறுத்த முடிந்த மத்திய அரசுக்கு, தேசிய கட்சி ஆட்சி நடக்கும் கர்நாடகாவில் ஏன் நிறுத்த முடியாது என கேட்கிறார்கள் விவசாயிகள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications